மக்கள் தங்களது இனம், வம்சாவளி ஆகியவற்றை மறந்து ஒரே மக்களாகப் பிணைந்தால் மட்டுமே பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ஒரே மலேசியா கோட்பாடு வெற்றி பெற முடியும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார்.
தேசிய ஒற்றுமையை அடைவதற்கு பாங்சா மலேசியா எனப்படும் மலேசிய இனத்தை உருவாக்கும் தமது 2020 இலட்சியத்திற்கு ஏற்ப நஜிப்பின் கோட்பாடு அமைந்திருப்பதாக அவர் சொன்னார்.
“நீங்கள் தேசிய ஒற்றுமை எனக் கூறும் போது நீங்கள் உங்களுடைய கடந்த காலத்தை, வம்சாவளியை, அடையாளத்தை மறந்து விட்டு நீங்கள் ஒரே மொழியைப் பேச வேண்டும். நீங்கள் பூர்வகுடி மக்கள் அல்லது பூர்வகுடி மக்கள் அல்லாதவர்கள் என்பதற்காக சலுகைகளையும் கேட்கக் கூடாது”, என்றார் அவர்.
கோலாலம்பூரில் மலேசிய-ஐரோப்பிய கலந்துரையாடல் நிகழ்வில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்த போது அந்த முன்னாள் பிரதமர் அவ்வாறு கூறினார்.
“ஒரே மலேசியா என்னும் கோட்பாடுகளை” பேசிக் கொண்டு அதே நேரத்தில் தங்களை குறிப்பிட்ட இனப் பின்னணியுடன் அடையாளம் காட்டிக் கொள்கின்றவர்களை மகாதீர் சாடினார்.
அந்தப் போக்கு ஒரே மலேசியா கோட்பாட்டுக்கு முரணாணது என்றார் அவர்.
“நாம் நம்மை மலாய் வம்சாவளி, சீன வம்சாவளி அல்லது இந்திய வம்சாவளி மலேசியர்கள் என அழைத்துக் கொள்ளக் கூடாது”, எனக் குறிப்பிட்ட மகாதீர், அந்த கடந்த காலத்தை மறந்தால் மட்டுமே ஒரே மலேசியாவுக்கு உண்மையான அர்த்தம் கிடைக்கும்”, என்றார்.
நமது வம்சாவளியை மறக்க சொல்லும் அவர்..முதலில் அனைவரும் இந்நாட்டு மக்களே என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .அனைத்து இனத்வருக்கும் சமமான உரிமை வழங்க வேண்டும். தனி நபர் மேம்பாட்டுக்கு பர பட்சம் பார்க்க கூடாது….சிறப்பு சலுகைகள் குறிப்பிட இனத்வருக்கு மட்டும வழங்குவது..வேறுபாட்டை உருவாக்கிறது.. அனைவரது முன்னேற்றத்தை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்..
நீங்கள் பெரிய மனிதர் . உங்கள் கருத்தைச் சொல்வதற்கு உங்களுக்கு உரிமையுண்டு. அதைக்குறித்து என் கருத்தையும் சொல்கிறேன். எனக்காக கொஞ்சம் செவிகொடுங்கள். ஓர் இனம் மொழி,கலாசாரத்தை இழந்துவிட்டால்; மறந்துவிட்டால் அது தன்னுடைய முகத்தை மாத்திரமல்ல தன்னுடைய ஜீவனையே இழந்துவிடும் . உலகத்தில் நாகரீகமில்லாத காட்டுமிராண்டி சமூகம்கூட தன்னுடைய அடையாளத்தை விட்டுக்கொடுக்க முன்வராதே… அப்படியிருக்க , ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமேயே உலகத்திற்கு நாகரீகம் கற்றுக்கொடுத்த மூத்த இனங்களான தமிழர்களையும் சீனர்களும் தங்களுடைய வேர்களை மறந்துவிடவேண்டும் என்று எப்படி நீங்கள் எதிர்பார்க்கலாம்? உங்களைப்போன்ற தலைவர்களுக்கு இது அழகல்லவே! நீங்கள் கோடிகோடியாகக் கொட்டிக்கொடுத்தாலும் எங்கள் இன உணர்வையும் மொழி உணர்வையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டோம். இந்த நாட்டில் மலாயக்காரர்களிடமுள்ள இன உணர்வையும் மொழி உணர்வையும் நான் கண்டு பிரமிக்கிறேன்; மதிக்கிறேன். அதுபோல் உங்களைப்போன்றவர்களும் மற்றவர்களை மதியுங்கள். தயவு செய்து வேரறுக்கும் ஆலோசனையை விட்டுவிடுங்கள். மற்றும் ஒன்று , மலேசியாவில் மலாய்க் காரர்கள் , சீனர்கள் , இந்தியர்கள் மற்றுமுள்ள யாவரும் இப்போதும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் ஒற்றுமையிழந்து காணப்படுகிறார்கள். அரசியல்வாதிகளின் சுயநலத்திற்காக மக்களின் ஒற்றுமையையும் எதிர்காலத்தையும் தயைகூர்ந்து கெடுக்காமல் பார்த்துக்கொண்டால் அதுவே போதுமானது.