Tuesday, January 18, 2011

திட்டமிட்ட இன இழிவு!

தென்னிந்தியர்களைப் பறையா என்று குறிப்பிடும் வாசகத்தைக் கொண்ட ஒரு நூலை ஐந்தாம் படிவ மாணவர்களுக்குப் பாட நூலாக வைத்திருப்பது தென்னிந்தியர்களைத் திட்டமிட்டு இழிவுபடுத்தும் செயல் அன்றி வேறு இல்லை. (- முனைவர் ஆறு. நாகப்பன்)

மேலும், மனித உணர்வையும் நாகரீகத்தையும் நயம்படக் கூறுவதே இலக்கியத்தின் நோக்கம். குறிப்பிட்ட ஓர் இனத்தை இழிவுபடுத்தும் நோக்கத்தில் இலக்கியத்தைப் பயன்படுத்துவதும் இப்படிப்பட்ட கீழ்த்தரமான இலக்கியப் பகுதிகளைத் தேர்வுக்காக மாணவர்கள் படிக்கும் கட்டாயத்தை ஏற்படுத்துவதும் கல்வி உலகின் நாகரீகமல்ல.

ஐந்தாம் படிவ மலாய் இலக்கியப் பாடத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் இண்டர்லோக் என்னும் இப்பாட நூலில் மலேசியாவுக்குத் தென்னிந்தியர் வருகை பற்றிய வரலாற்றுப் பின்னணியிலான குறுநாவல் ஒன்று உள்ளது. இக்கதையின் தலைவன் பறையா என்னும் சாதிப்பிரிவைச் சேர்ந்தவன் என்று அறிமுகப்படுத்தப்படுகின்றான்.

கேரளாவிலிருந்து பல நகரங்களைக் கடந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் கப்பலேறி பினங்கு துறைமுகத்திற்கு வருவதாகக் கதை. இப்படி வருகிறவர்களில் பலர் பறையர் என்பதால் அவர்கள் ஒருவரோடு ஒருவர் இடித்துக் கொண்டு வருவதற்குப் பயப்படவில்லை என்றும் கப்பலில் ஆடுகளைப் போல் இவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர் என்றும் இவர் எழுதியுள்ளார்.

மேலும் தென்னிந்தியாவில் இவர்கள் விலங்குகளை விட மோசமாக நடத்தப்பட்டனர் என்றும் படைப்பாளர் எழுதிச் செல்கிறார். தென்னிந்தியாவில் வேலை செய்வதற்கும் சாதிக் கட்டுப்பாடு உள்ளது. மலேசியாவில் சாதி வேறுபாடு இல்லாமல் வேலை செய்ய முடியும் என்றும் படைப்பாளர் எழுதியுள்ளார்.

எழுபத்தைந்து பக்கங்கள் கொண்ட இந்தக் குறுநாவலில் மணியம் என்ற கதைத் தலைவன் பறையனாக இருக்க வேண்டுமென்பதற்கான அவசியம் எதுவும் இருக்கவில்லை. அவனை ஒரு தென்னிந்தியன் என்று அறிமுகப்படுத்தியிருந்தாலே கதையில் எந்தப் பகுதிக்கும் ஊறு ஏற்படப் போவதில்லை. கதைப் போக்கைக் கருத்தில் கொண்டு பார்த்தால் தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்களைப் பறையர் என்று கூறியிருப்பது திட்டமிட்ட ஒரு இன இழிவாகவே தெரிகிறது.

இது முதல் தடவை அல்ல. இதற்கு முன்னும் பல பள்ளிப் பாட நூல்களில் ‘கஸ்டா பறையா’ என்ற தொடர் பல முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழர் வரலாறு, பண்பாடு, சமயம் பற்றி எப்போது எழுதப்பட்டாலும் மலாய் அறிஞர்களுக்கு ‘கஸ்டா பறையா’ என்ற ஒரு செய்தி மட்டுமே தெளிவாகக் கண்ணில் படுகிறது. இந்த அறிஞர்கள் அறிவார்ந்த ஆராய்ச்சியாளராய் இருப்பதைக் காட்டிலும் மலேசிய இந்தியர்களை வெறுத்து இழிவு செய்யும் இனவாதிகளாகவே தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.

இப்படிப் பள்ளிப் பாட நூல்களில் எழுதுவதன் நோக்கம் என்ன? இதனைப் படிக்கும் மலாய்க்கார மாணவர்கள் இந்திய மாணவர்களைக் கீழ்மக்களாகக் கண்ணோட்டமிட வேண்டும் என்பதும் இந்திய மாணவர்கள் தம்மைத் தாமே இழிந்தவர்களாகக் கருதும் தாழ்வு மனப்பான்மையுள்ளவர்களாக வளர வேண்டும் என்பதும்தான் இந்த எழுத்துகளின் நோக்கமாக இருக்க முடியும்.

இண்டர்லோக் என்னும் இந்தக் குறுநாவல் தொகுதியில் கெலுவார்க செமான், கெலுவார்க சிங் ஹுவட், கெலுவார்க மணியம், இண்டர்லோக் என்னும் நான்கு குறுநாவல்கள் அடங்கியுள்ளன. முதல் கதை இந்த நாட்டின் பூமிபுத்ராக்கள் வந்தவர்கள் வாழ்வதற்கு இடம் கொடுத்த நல்லவர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். சீனர்கள் அவர்கள் நாட்டில் ஏற்பட்ட வறுமையால் கப்பலேறி மலாயாவுக்கு வந்து மலாயாவின் வளத்தை எவ்வாறு பங்கிட்டுக் கொண்டனர் என்று காட்டியுள்ளனர். மூன்றாம் கதையில் வறுமை, சாதிக் கட்டமைப்பு ஆகியவற்றால் தென்னிந்தியர்கள் மலாயாவுக்கு வந்த கதையைக் கூறியுள்ளனர்.

இந்தியரும் சீனரும் மலாயாவுக்குப் பிழைக்க வந்தவர்கள் அல்லது வந்தேறிகள் என்ற கருத்தை மிகுந்த லாவகமாகப் படைப்பாளர் வலியுறுத்துகிறார். பிழைக்க வந்த இந்தியரும் சீனரும் இந்த நாட்டின் வளமைக்குக் கொடுத்த உயிர்க் கொடைகள் ஏராளம். இந்த உயிர்க் கொடைகளுக்குப் பின்னால் இருக்கும் கதைகள் ஆயிரம். இவற்றை எழுதாமல் மறைத்து இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அவர்கள் பிழைக்க வந்த கதையையும் அவர்களின் சாதீயக் கட்டமைப்பையும் மிகுதியாக விவரிப்பது ஏன் என்பதுதான் நமது கேள்வி.

தேசிய ஒருமைப்பாட்டை மையமாகக் கொண்டு நமது கல்விக்கொள்கை அமைந்துள்ளது. ஆனால் நடைமுறையில் ஒருமைப்பாட்டுக்கு எதிரான போக்கில் மலாய்க் கல்வியாளர்களின் போக்கு செயல்படுகிறது. வெறும் கண்டனங்களால் மட்டும் இப்படிப்பட்ட இன இழிவு பரப்புரைகளைத் தடுத்துவிட முடியாது. தமிழர் சமூக இயக்கங்கள் நூலை வெளியிட்டிருக்கும் தேசிய மொழி வளர்ப்பு நிறுவனத்துடனும் கல்வி அமைச்சுடனும் கலந்துரையாடல்கள் நடத்திப் பாட நூல்களில் இப்படிப்பட்ட பகுதிகள் இனியும் வராமல் இருக்க வழி செய்ய வேண்டும்.

- malaysiaindru

சுதந்திர மலேசியாவின் நிரந்தர அடிமைகள்

(- முனைவர் நாகப்பன் ஆறுமுகம்) இன்றைய மலேசியாவின் அழகான கோபுரங்களுக்கு அடித்தளமாக இருந்தது தோட்டத் தொழில்தான். தொடக்கக் காலத்தில் தேயிலை, கரும்பும் பின்னர் ரப்பர், எண்ணெய்பனையும் இந்த நாட்டின் முகவரிகளாக அமைந்தன.

மலாய் ஆட்சியாளரிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தால் இந்த மண்ணை இலவசமாகப் பெற்றுக் கொண்ட பிரிட்டீஷ் காலனித்துவவாதிகள் ஒப்பந்தக் கூலிகளாகத் தமிழரை “இறக்குமதி” செய்து காடுகளைக் கழனிகளாக மாற்றினர். வந்தவர்களில் செத்தவர்கள் போக மற்றவர்கள் சாகும்வரை எலும்பு தேய உழைத்தனர். ஏற்றுமதி செய்யப்பட்ட விவசாய உற்பத்திப் பொருள்கள் பயனீட்டுப் பொருள்களாக மாறி உலகெங்கும் பரவின. ஐரோப்பிய “கம்பெனிகள்” வளம் பெற்றன. ஆனால் தோட்டத் தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழர் அடிமைகளாகவே வாழ்ந்து கொண்டிருந்தனர்.

இனியும் குனிய முடியாது என்ற நிலை வந்தபோது தோட்டத் தொழிலாளரில் சிலர் நிமிரத் தொடங்கினர். உரிமைக் குரல் சன்னமாகத் தொடங்கி வெடித்து வீரிட்டது. 1941இல் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 20,000 தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

அந்தக் கோரிக்கைகள்

1. ஒரே மாதிரியான வேலை செய்யும் சீன, இந்தியத் தொழிலாளர்களுக்குச் சமமான சம்பளம் தர வேண்டும். அப்போது தமிழர் பெற்ற நாள் சம்பளம் 55 காசு. சீனர் பெற்றது 85 காசு.

2. தோட்டப் புறங்களில் தமிழ்த் தொழிலாளர்களைக் கண்காணிக்கும் கிராணிமார்களாக இருந்தவர்கள் மலையாளிகளும் யாழ்ப்பாணத் தமிழர்களும். இவர்களுக்குப் பதிலாகத் தமிழரே கிராணிமார்களாக வர வேண்டும்.

3. ஐரோப்பிய துரைகளும் இந்தியக் கிராணிமார்களும் தமிழ்ப் பெண்களிடம் புரியும் பாலியல் கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டும்.

4. தோட்டப் புறக் குழந்தைகளுக்குக் கல்வி வசதி வேண்டும்.

5. ஐரோப்பியத் துரைகளும் இந்தியக் கிராணிகளும் எதிரில் வரும்போது சைக்கிளை விட்டு இறங்காமல் போவதற்குத் தமிழ்த் தொழிலாளர்களுக்கு உரிமை வேண்டும்.

6. 12 மணி நேர வேலை முறையைக் குறைத்து 8 மணி நேர வேலைமுறை வர வேண்டும்.

7. தொழிலாளர்களுக்குச் சங்கம் அமைத்துக் கொள்வதற்கு அனுமதி வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளோடு ஐந்து ஆண்டுகள் போராட்டம் நடந்தது. 1941,ல் வேலை நிறுத்தமும் நடைபெற்றது. விளைவு ஐந்து காசு சம்பள உயர்வு. வேறு எந்த மாற்றமும் வரவில்லை.

இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று முத்திரை குத்தப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். அப்போது பிரிட்டீஷ் காலனித்துவத்துக்கு எதிராகக் கம்யூனிஸ்டுகள் கொரிலாப் போர் நடத்திக் கொண்டிருந்தனர். தோட்டத் தொழிலாளருக்கான போராட்டம் கம்யூனிஸ்டு போராட்டமாகத் திரிக்கப்பட்டது. 1948இல் அவசர காலம் பிரகடனப்படுத்தப்பட்டது.

இராணுவத்தினர் களம் இறங்கிப் போராளிகளைச் சரமாரியாகச் சுட்டுத் தள்ளினர். தொழிற்சங்கத் தலைவர்கள் கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவானவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டனர். இவர்களில் மலாயா பொது தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த எஸ்.எ.கணபதி புடு சிறையில் தூக்கிலிடப்பட்டார். வீரசேனன் என்ற மற்றொரு போராட்டவாதி சுடப்பட்டார்.

இவ்வாறு தோட்டத் தொழிலாளர் போராட்டம் ஒடுக்கப்பட்டது. மீண்டும் அதே அடிமைத்தனத்தின் அடித்தளத்தில் அவர்கள் வாழ்க்கை தொடர்ந்தது. இன்றும் தொடர்கிறது.

இன்று

நாடு முழுவதும் செம்பனைத் தோட்டத் தொழிலாளர் மாதச் சம்பளம் கோரி கடந்த 27 மாதங்களாகப் போராடினர். தொழிலியல் நீதிமன்றம் நேற்று (14 டிசம்பர் 2010) வழங்கிய தீர்ப்பில் மாதச்சம்பளக் கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது. நாள்படி 1.35 காசிலிருந்து 1.60 காசாக 25 காசு உயர்த்தப்பட்டது. இது வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு நாளைக்கும் வழங்கப்படும். மாதத்தில் 25 நாட்கள் வேலை செய்தால் ஏறத்தாழ 300 ரிங்கிட் மட்டுமே ஊதியமாகப் பெற முடிகிறது.

தோட்டப் புறங்களில் இந்தோனேசியத் தொழிலாளர்களும் குத்தகையில் வேலை செய்யும் வங்காள தேசிகளும் இதைவிடக் குறைந்த வருமானத்தில் வேலை செய்யத் தயாரய் இருப்பதால் தலைமுறை தலைமுறையாகத் தோட்டத்தில் வேலை செய்து வந்த இந்தியர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

நாடு விடுதலை அடைந்து 54 ஆண்டுகள் ஆன பின்னும் தோட்டத் தொழிலாளர் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. நாடு முன்னேறிவிட்டது. தோட்டங்களை விழுங்கிக் கொண்டு மேம்பாட்டுத் திட்டங்கள் நிமிர்ந்து நிற்கின்றன. விவசாயத் துறையை மலேசிய அரசு பின்னுக்குத் தள்ளி தொழிற்துறையை அந்த இடத்தில் வைத்துவிட்டது. விவசாயத் துறை அலட்சியப்படுத்தப்பட்டது போல் அதனைச் சார்ந்த மக்களும் முற்றிலும் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளனர்.

தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் பல ஆண்டுகளாக மாதச் சம்பளம் கேட்பது போல் நடித்துக் கொண்டிருக்கிறது. பிள்ளையைக் கிள்ளுவதும் தொட்டிலை ஆட்டுவதுமாக இந்தச் சங்கம் தொழிலாளர் முதலாளி இரண்டுக்கும் நடுவே நாடகமாடிக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கிடையில் வீட்டுப் பணிப் பெண்களுக்கும் காவலர்களுக்கும் மாதச்சம்பளம் கொடுக்க முயற்சி செய்து வரும் மனித வள அமைச்சர் தோட்டத் தொழிலாளர் பற்றி வாய் திறக்கவில்லை.

இன்று உள்நாட்டுத் துரைகளே மிகப் பெரிய தோட்டங்களின் முதலாளிகள் ஆகியுள்ளனர். பிரிட்டீஷ்காரர்களிடமிருந்து நாட்டைத் திரும்பப் பெற்றுக் கொண்ட இந்த உள்நாட்டுத் துரைகள் நவீன காலனித்துவவாதிகளாக பழைய அடிமை முறையைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.

தொழிற்சாலைகளில் 700 ரிங்கிட்டுக்கும் குறையாத ஊதியம் பெறும் அடிநிலைத் தொழிலாளரைக் காட்டிலும் தோட்டப்புறத் தொழிலாளர்கள் மோசமான வருவாயைப் பெறுகின்றனர். மோசமான வீட்டு வசதி, சுற்றுச்சூழல், வறுமை போன்றவற்றுக்கு நடுவே பிறந்து வளரும் பிள்ளைகள் போதுமான கல்வி அறிவும் வழிகாட்டலும் இல்லாமல் வெகு விரைவில் சமூகச் சீர்கேடுகளில் சிக்கிக் கொள்கின்றனர்.

நகர்ப்புறங்களின் புறம்போக்குப் பகுதிகளும் தோட்டப்புறங்களும் தமிழர் குழுமி வாழும் பகுதிகளாக இருக்கின்றன. வறுமைக் கோட்டைக் கடக்க முடியாத இவர்களிலிருந்து உற்பத்தியாகி வளரும் இளம் தலைமுறையினர் “ஒரே மலேசியாவுக்குள்” நுழைவது எப்படிச் சாத்தியமாகும்?

தோட்டப்புறங்கள் தனியார் நிறுவனங்கள். அங்கே நடக்கும் எதற்கும் நாங்கள் பொறுப்பல்ல என்று அம்னோ அரசு கண்ணை மூடிக் கொள்கிறது. தேர்தல் காலத்தில் மட்டும் வாக்கு கேட்கப் போகிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்குப் போடும் ஆட்டுக்கறி சாப்பாட்டுக்கு அப்பால் நிரந்தரமாக இவர்கள் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்குரிய திட்டங்கள் எங்கே?

வறுமை மற்றெல்லாச் சீர்கேடுகளுக்கும் தாய். தோட்டப்புறத் தமிழர் இந்த வறுமையின் குழந்தைகளாக இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ வேண்டும்? சுதந்திர மலேசியாவின் நிரந்தர அடிமைகளா இவர்கள்?

(மலேசியா இன்று)

About the Author

Admin has written 895 stories on this site.

jegaveeraphandian wrote on 19 January, 2011, 14:57

எது எதற்கோ சங்கம் அமைத்து விழா எடுக்கிறார்கள் மலேசியத் தமிழர்கள். இந்த மண்ணில் நமக்காகப் போராடி குற்றவாளியாக்கப்பட்டு நீதிக்காக உயிர்நீத்த தியாகச்சுடர்களாம் வீரசேனன், எஸ். எ . கணபதி போன்ற வீரத் திலகங்களுக்கு உரிய மரியாதையை மலேசியத் தமிழர்கள் கொடுக்கவில்லையே என்று நினைக்கும்போது உள்ளம் இரத்தக் கண்ணீர் வடிக்கிறது.
சினிமா நடிகர்களுக்கும் போலி அரசியல்வாதிகளுக்கும் செய்யும் மரியாதையில் நாம் மதிமயங்கிக் கிடக்கிறோம்; ஆர்ப்பாட்டம் செய்கிறோம். ஆனால் நமக்காகச் செத்துமறைந்தவர்களுக்கு எதுவும் செய்யாமல் நன்றி இல்லாதவர்களாய் இருக்கிறோமே என்னே கொடுமையையா!
நிலைமை இப்படியே தொடருமானால் பேரறிஞர் அண்ணா சொன்னதைப்போல நம்மவருக்குத் தொண்டுசெய்ய எந்த நல்ல மனிதரும் இல்லாமலே போய்விடுவார்கள் என்பது உண்மையாகிவிடும்! போலிகள் மிகுந்த ஆராவாரத்துடனும் ஆற்பாட்டத்துடனும் தமிழ்ச் சமுதாயத்தைக் கொள்ளையடிக்கப் புறப்படுவார்கள். இப்போதே அதை நாம் கண்ணாரக் காண்கிறோமே..! வாழ்க தமிழினம்!

Monday, January 17, 2011

பிடிவாதமாக இருந்தால்...

முனைவர் ஆறு. நாகப்பன்

இண்டர்லோக் பிரச்சனையை இனியும் நீட்டிப்பது பரிசானுக்கு ஆபத்தாக முடியலாம். இண்டர்லோக் நாவலை மீட்டுக் கொள்ள மாட்டோம் என்று பாரிசான் பிடிவாதமாக இருக்குமானால் அடுத்த பொதுத் தேர்தலுக்கு இதனை இரண்டாவது அரசியல் சுனாமியாக மாற்ற இந்திய இயக்கங்கள் திட்டமிடக் கூடும்.

இந்தியர்களிடையே இண்டர்லோக் விவகாரம் தொடர்ந்து பரவி வருகிறது. இந்தியர் ஒருங்கிணைப்புப் பேரவைகள் பல இந்தியர்களை ஈர்க்கும் கையேடுகளைத் தயாரித்து வருகின்றன. தைப்பூச விழாவின்போது இக்கையேடுகள் அனைத்து இந்தியர் கைகளுக்கும் போய்ச் சேரும் வாய்ப்பு இருக்கிறது.

இதற்கிடையில் மஇகா அமைச்சரைச் சந்திப்போம், அமைச்சரவையில் பேசுவோம், உணர்ச்சியைத் தூண்டக் கூடிய சொற்களை மட்டும் அகற்றினால் போதுமானது என்றெல்லாம் பேசி வருகிறது. இந்த வார்த்தைகள் மீது இந்தியர்களுக்கு அணுவளவும் நம்பிக்கை இல்லை. மஇகாவின் வார்த்தைகளை அம்னோவின் “ஆபீஸ்பையன்” கூட மதிக்க மாட்டான் என்பதுதான் கடந்த கால வரலாறு. இந்த விஷயத்தில் அதுவேதான் நடக்கப் போகிறது என்பதால் இந்தியர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து நாவலை மீட்டுக்கொள்ளும் முடிவை வற்புறுத்துகிறார்கள்.

கோழியும் குழம்பும்

நாவலில் உள்ள சில வார்த்தைகளை மட்டும் நீக்கினால் போதுமானது என்று அம்னோ அடிவருடிகள் சிலர் கூறி வருவதைக் கேட்கும்போது நமக்கு வழக்கமாக நடக்கும் ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. அரசு அலுவலகங்களில் அல்லது ஒருமைப்பாட்டு விருந்து நிகழ்ச்சிகளில் இந்தியர்களுக்கு மரக்கறி உணவு கேட்போம். அப்போது ஏற்பாட்டாளர் சர்வ அலட்சியமாக ஒரு வழி சொல்லுவார். கோழிக்கறியில் உள்ள கோழியைத் தள்ளிவிட்டுக் குழம்பை மட்டும் எடுத்துக் கொள்ளுங்களேன் என்று.

மலாய்க்காரர்கள் நம் வீட்டுத் தீபாவளிக்கு வரும்போது அவர்களுக்கு எது ஹலால், எது ஹலால் இல்லை என்றெல்லாம் நாம் தெரிந்து வைத்து அவர்களுக்கு ஏற்றாற் போல் செய்கிறோம். ஆனால் மலாய்க்காரர்கள் விருந்திலும் அரசு விருந்துகளிலும் கோழியைத் தள்ளிவிட்டுக் குழம்பை எடுத்துக் கொள்ளச் சொல்வார்கள். மஇகா. தலைவர்களுக்கும் இந்த அனுபவம் இருக்கலாம். அப்போது அவர்கள் மான ரோஷம் பார்க்காமல் உள்ளதை விழுங்கிவிட்டும் வரலாம்.

அதே அணுகுமுறையில்தான் இப்போதும் பேசுகிறார்கள். இப்போதுதான் ஐவர் கொண்ட குழுவை அமைக்கிறார்களாம். அந்தக் குழு புத்தகத்தைப் படித்து முடித்து (புத்தகம் 426 பக்கம்) ஆய்வு செய்து அரசுக்கு மகஜர் கொடுப்பார்கள். மகஜர் கொடுக்கப்பட்டது என்ற செய்தி பெர்னாமா முதல் எல்லா ஊடகங்களிலும் ஒளி, ஒலிபரப்பாகும். அச்சாகும். உணர்ச்சிவசப்பட ஒன்றுமில்லை. எழுத்தாளர் இந்தியர் வரலாற்றைத்தான் எழுதியிருக்கிறார் என்று முடிவை அரசு அறிவிக்கும். நமக்குப் பல பிரச்சனைகளில் கடந்த காலங்களில் ஏற்பட்ட அனுபவம் இதைத்தான் கற்பிக்கிறது.

மஇகாவுக்கும் அம்னோவுக்கும் ஆதரவாக சில அரசு சாரா இந்திய அமைப்புகளும் பேசத் தொடங்கியுள்ளன. நாவலை எதிர்ப்பது போல் நடித்து, படித்துப் பார்த்தோம் அப்படி ஒன்றும் மோசமாக இல்லை. நமக்குத் தேசிய ஒருமைப்பாடு மிக முக்கியம் என்று எழுந்து நின்று தேசிய கீதம் பாடி முடிப்பார்கள். பிரச்சனையை ஆறப் போடுதல், இழுத்தடித்தல், பிறவற்றில் கவனத்தைத் திருப்புதல், மிரட்டுதல் உட்பட சாம, பேத, தான, தண்டம் என்ற உத்திகளையெல்லாம் அரசும் செய்யும். நம்மவரும் செய்வார்கள்.

மரக்கறியாளர் கோழியைத் தள்ளிவிட்டுக் குழம்பை எடுத்துக் கொள்வது எப்படி கூறு கெட்டதனமோ அப்படித்தான் சில சொற்களை மட்டும் நீக்கிவிட்டு நாவலைப் பயன்படுத்துவதும் என்பதில் சில அரசு சாரா இயக்கங்கள் மட்டும் உறுதியாக இருக்கின்றன.

இந்த நேரத்தில் மலேசிய இந்து சங்கம், இந்து இளைஞர் இயக்கம், தமிழ் இளைஞர் மணி மன்றம், கேரளா சங்கம், ஆந்திரா சங்கம், தமிழ் எழுத்தாளர் சங்கம், ஏராளமான சாதிச் சங்கங்கள் அனைத்தும் மௌனம் சாதிக்கின்றன. நாவலில் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தென்னிந்தியர் எல்லாரும் பறையர்தான் என்று ஒட்டுமொத்தமாகச் சொல்லிவிட்டார்கள். எனவே, இது தென்னிந்தியரில் குறிப்பிட்ட ஒரு சிறிய பிரிவினர் சம்பந்தமான பிரச்சனை அல்ல என்பதை தென்னிந்தியர் எல்லாரும் புரிந்து கொண்டு ஒன்றுபட்ட போராட்டத்திற்கு நாம் ஒருங்கிணைய வேண்டும்.

பல இந்திய அரசு சாரா இயக்கங்கள் மௌனம் சாதிப்பது ஏன் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தாம். கடந்த ஆண்டு பிரதமர் நஜிப் தேர்தலுக்கான பல “முஸ்தீபுகளைச்” செய்திருக்கிறார். இந்தியர்களுக்கு மஇகா. வழியாக மானியம் வழங்கும் மரபை மாற்றி அவரே ஒவ்வொரு இயக்கமாக அழைத்து நெஞ்சுக்கு நெஞ்சு நேராகப் பேசி இலட்சங்களை வாரிக் கொடுத்திருக்கிறார். வாங்கிக் கொண்டு வந்த அமைப்புகள் பாரிசானுக்குத் தங்கள் விசுவாசத்தைப் பதிவு செய்ததோடு அடுத்து பல இலட்சங்களை வாங்கும் திட்டத்தில் பாரிசானுக்குப் போஸ்டர் ஒட்டத் தயாராகி இருக்கிறார்கள்.

இனி இந்தியர்களின் மானம், மரியாதை, சமூக நல உரிமைகள் பற்றி இந்த அமைப்புகள் வாயைத் திறப்பார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

பாக்காதானில் ஒருமைப்பாட்டுச் சீர்குலைவு, பாஸ் – அம்னோ பேச்சுவார்த்தை, இந்திய இயக்கங்களைப் பிரித்து வைப்பதில் மிகப் பெரிய வெற்றி, இவற்றையெல்லாம் பாரிசான் தனக்குரிய வெற்றி வாய்ப்புகளாக கருதி உள்ளது. நஜிப் தனது வியூகத்தில் வெற்றி பெற்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பாரிசான் வெற்றி பெற்றாலும் பாக்காதான் வெற்றி பெற்றாலும் இந்தியர் நிலையில் எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை. இண்டர்லோக் விஷயத்தில் பாக்காதான் தன் வண்ணத்தைக் காட்டிவிட்டது. இந்தியர்களுக்கு ஆதரவாகப் பேசினால் மலாய்க்காரர் வாக்குகள் திசை மாறிப்போகும் என்ற அச்சத்தில் பாக்காதானும் மௌனம் சாதிக்கிறது.

தேர்தலுக்கு முந்திய சூழ்நிலை பாரிசானுக்கு ஆதரவாக இருந்தாலும் இண்டர்லோக் நாவல் தொடர்பான பிரச்சனை வலுத்து வருவதால் காலதாமதம் இல்லாமல், கௌரவம் பார்க்காமல் பாரிசான் அரசு இண்டர்லோக் நாவலை மீட்டுக் கொண்டு நூற்றுக் கணக்கணக்கான நல்ல நாவல்களில் ஒன்றைப் பாடநூலாக வைக்கும் முடிவை உடனே எடுக்க வேண்டும்.

தாமதமாகும் ஒவ்வொரு நாளும் பாரிசான் சில ஆயிரம் வாக்குகளை இழந்து கொண்டிருக்கிறது.

You can leave a response, or trackback from your own site.

8 Responses to “பிரச்சனையை நீட்டிப்பது பாரிசானுக்கு ஆபத்து!”

  1. Kaasu says:

    Novel Interlok pernah menjadi bahan didik sebelum ini di zaman bapak. Bila mana anak berkuasa maka dibawa kembali. Bukan itu sahaja banyak perkara lama dibawa kembali kerana diteliti “old is gold”. Terima sahajalah. Api boleh membakar, bila sebut perkataan api adakah lidah kita panas? Ada apa pada perkataan… ertinya adalah penting.

    Adakah tiada sistem kasta di India sekarang? Tiadakah ada perbezaan kasta di Malaysia kini terutamanya dalam hal-hal cinta dan kahwin?

    Tepuk dada tanya selera. Jika kita bersih, bila orang kata kotor kita boleh lawan. Kalau sini pun tong sampah, orang kata apa pun terima dan cuba bersihkan.

  2. s.maniam says:

    the book is inaccurate and disgrace for the indian community.

  3. அரசின் அடுத்த நடவடிக்கை எப்படி அமைந்தால் மலேசிய இந்தியர்கள் மகிழ்வார்களென்பதை மிக அழகாக எடுத்துச் சொல்லி இருக்கின்றீர்கள். நம் பிரதமர் மலேசிய இந்தியர்களுக்கு மான உணர்வே மிகமிக முக்கியமென்பதை உணர்ந்தவர். இவ்வளவு காலம் பரச்னை இல்லமல் பாடம் நடத்த இன்னும்
    எத்தனையோ நூல்கள் பல அதில் சேர்த்துக்கொள்ள இன்னமும் தகுதிபெற்று இருக்கும் போது இந்த பிரச்னைக்குரிய நூலை எடுத்துவிடச் சொல்லி நாம் எல்லோருமே பிரதமரிடம் சொல்கிறோம்! இதில், இனி நமக்கு ஏமாற்றம் வராது. நம் பிரதமரை நம்பி, நாம் பொறுத்திருந்து பார்ப்போம்! அனைத்து இனத்தின் மானம் பறிபோகாமல் பிரச்னையைத் தீர்த்துவிடுவார்.

  4. 1Malaysian says:

    Teresa Kok was arrested under ISA on rumours that she talked about azan prayers which was denied by Mosque management. Even for little, little things Malays are demanding ISA to be used. Then why ISA is not being used on those who insult Hinduism, Indians etc. Is this 1Malaysia?

  5. வேங்கை says:

    நடுநிலையான கட்டுரை.. இந்தியர் நலனில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றுதான் என்பதனை நாம் நன்கு உணர வேண்டும். நம் ஓட்டுகள்தான் அவர்களுக்கு முக்கியம். நம் பிரச்சனைகள் அல்ல! நேற்று என் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் தலைநகரில் ஒரு பிரபலமான மலாய் மொழி ஆசிரியர். 1000 மாணவர்களுக்கு மேற்பட்டவர்கள் அவரிடம் பாடம் படித்து மலாய் மொழியில் A எடுத்திருக்கின்றனர். இருப்பினும், அவரை இன்று அவர் மாணவர்களே பறையா என்று அழைக்கத்தொடங்கி விட்டதாக மிகவும் மனம் வருந்தி கூறினார்.

    பல்லைக் கடித்துக் கொண்டேன், ஆனால் எதுவரையில் இந்த பொறுமை எல்லை காக்கும் என்று தெரியவில்லை!

  6. malaysian says:

    Mereka yang dari arah ke utara sedikit bercakap bahasa Malayalam atau Telugu, tetapi hampir semuanya tahu bahasa Tamil. Malayalam dan Telugu pun berasal dari satu rumpun bahasa Dravidia. Satu perkara besar yang membuatkan mereka senang berkaul adalah kerana mereka tergolong dalam satu kasta Paria. (?????? 211)
    ???????????? ?????????????? ???????? ??????????????? ??????????. ????????????? ????????? ????????. ?????????? ?????????? ????????????? ????????????? ??????????????. ??????? ??????? ????????? ????????????? ??????; ??????? ????????? ?????? ??????? ?????????????????.
    Mereka tidak perlu takut akan mengotori sesiapa kalau bersentuhan. (?????? 211)
    ???????? ???????? ??????????? ??????? ?????? ?????????????.
    Mereka berasak-asak seperti kambing . (?????? 211)
    ??????????? ???????????????.
    Disini, pekerjaan yang membezakan kasta tidak ada. (?????? 216)
    ???? ?????????? ?????????? ??????? ?????????.
    Kuli-kuli Cina itulah yang lebih banyak mendapat kesempatan. Maniam mengakui bahawa mereka lebih pantas bekerja dan sedikit bicara. (?????? 218)
    ????? ??????????? ??????? ?????????? ?????????????. ??????? ??????????????? ???? ????????? ??????????? ???????????? ?????? ?????? ??????? ????????.
    Maniam seperti orang India yang lain, tidak pernah khuatir tentang keselamatan isterinya. (?????? 218)
    ???? ???????????????? ??? ????????? ????????????????? ???????? ???????????? ?????.
    Dia gembira hidup di negeri ini kerana untuk pertama kali dalam hidupnya dia berasa dirinya sebagai manusia seperti orang lain. (?????? 218)
    ??? ???????? ????? ????????? ?????? ?????? ?????? ??????????? ???? ??????????? ???????????? ??????????.
    Disini dia tidak sahaja bebas bercampur gaul dengan orang lain sama sebangsanya, malah dia tidak takut dengan pantang larang yang terdapat di negaranya apabila seorang India daripada kasta rendah menyentuh orang India daripada kasta tinggi. (?????? 218 – 219)
    ????? ???? ??? ??????????? ????????????? ????????? ??? ??????????? ?????? ?????????????????? ??????? ?????????????. ??????? ????????????? ???????????????? ???????????.
    Dia tidak sahaja dimaki hamun dengan kata-kata yang kesat, malah disisihkan daripada masyarakat sehingga dirinya dan orang-orang yang sekasta dengannya menjadi lebih hina daripada. (?????? 219)
    ?????????????? ???????????? ???????? ???? ???????????? ??????????????. ??????????????? ?????????????????.
    Di negeri ini, orang daripada keturunan kasta tinggi, kasta Brahma memakai punul yang melintang di tubuh, tetapi dia tidak takut menyentuh orang itu. (?????? 219)
    ??????????? ???????? ??????? ??????????? ?????? ??????????????. ?????, ????????? ?????????? ???? ????????????.
    Dia boleh membeli barang daripada penjaja dengan memberikan wang dari tangan ke tangan; tidak seperti seperti di negaranya, dia mesti meletakkan wang itu di suatu tempat dan penjaja itu akan menyiram wang itu dengan air sebelum diambil dan dimasukkan ke dalam petinya. (?????? 219)
    ??????????????? ?????? ???????????? ???????? ???????? ???????????. ???? ???????? ???????????. ???????? ??????????? ?????????? ????????? ????????. ??????? ?????? ??????????? ???? ??????? ??????? ?????? ?????????? ???????????? ????????.
    Apatah pula lembu ialah binatang suci bagi orang Hindu; dan kalau binatang itu mati, seperti ibunya sendiri yang mati. (?????? 220)
    ?????????? ?????????? ???????? ?????????????. ?????????? ???????? ??? ???? ?????????? ?????????????.
    Tidak makan tengah hari tidak mendatangkan masalah, asalkan dia dapat mengunyah sirihnya seperti lembu atau kambing memamah biak. (?????? 224)
    ???? ???? ??????????? ??????? ?????????. ???, ???????????? ????????????? ???????? ?????????? ??????.

    Setelah menjalani beberapa upacara yang meletihkan, maka pesta perkhawinan Maniam dan Malini pun berakhir. (?????? 229)
    ?????? ???????????? ??????????????? ??????? ?????? ?????? ???????? ???????? ???????????.

    Dia gertak sahaja, orang kulit hitam ini tentu takut kecut. (?????? 253)
    ???? (?????????????) ??????????? ?????? ?????????) ??????????????.
    Suppiah menerpa ke hadapan dan sujud di kaki orang putih…… Lantas, dia menendang Suppiah. Suppiah terjungkir. (?????? 256)
    ?????? ????? ???????????? ?????? ???????? ???????????? ????????…… ???????????? ?????????? ????? ?????????? ???? ???????? ??????????.
    Dia berasa bangga kerana anjing orang putih itu jinak dengannya. (?????? 276)

  7. malaysia tamilan says:

    Saya sokong penuh pada karang ini..apa yang maksudkan karang ini adalah benar..!! kita mesti hapukan buku interlok ini..semasa sekali ini tak boleh gunakan dalam sekolah..buku ini tunjukkan anak-anak tamil dan cina adalah pendatang..!! siapa yang beranak selepas 1957 mereka adalah anak malaysia..!! kalau kita baca isu yang tulis oleh En.nagapan adalah benar dan memang benar kita tidak boleh sokong pada interlok..!! umno-barisan makan isinya hanya baki tulung pada kaum lain yang sakit hatinya ada juga parti=parti dan ngo-ngo tunggu untuk tulang itu..!! malunya ada orang dan parti macam ini dalam kaum kita..adakah mereka tahu apa erti maruah sendiri..?

  8. Tamilvanan says:

    ஒரு இன‌த்தை அல்ல‌து ம‌னித‌னை இழிவு ப‌டுத்த‌வ‌து என்ப‌து எந்த‌ ம‌த‌த்திலும் ச‌ம‌ய‌த்திலும் இல்லை. ஒரு நாவ‌லின் மூல‌ம் ஒரு இன‌த்தையே அவ‌மான‌ப் ப‌டுத்துப‌வ‌ன், அத‌ற்கு அங்கிகார‌ம் த‌ருப‌வ‌ன் ம‌ற்றும் சுய‌ன‌ல‌த்திற்காக‌ க‌ண்டும் காணாம‌ல் இருப்ப‌வ‌ன் எல்லாம் நிச்ச‌ய‌ம் ம‌னித‌ உண‌ர்வ‌ற்ற‌வ‌னாய்…ம‌க‌னாய்த்தான் இருப்பான்.

உதுசானின் பொருந்தாத கருத்து!

முனைவர் நாகப்பன் ஆறுமுகம்

இண்டர்லோக் நாவல் தொடர்பான விவாதத்தில் உத்துசான் மலேசியா முன் வைத்த கருத்தையும் அதை ஆதரித்துப் பேசியுள்ள இந்தியக் கல்வியாளர்கள் கருத்தையும் ஒரு சேர மறுக்க வேண்டியுள்ளது.

தென்னிந்தியர்களுக்குள் ஏன் இவ்வளவு சாதிச் சங்கங்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தென்னிந்தியர் வரலாற்றில் மட்டுமல்ல உலகத்தின் எந்த இனத்தின் வரலாற்றிலும் மக்கள் சில சமூகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது வெளிப்படை. நிலவுடைமை, ஆட்சியுடைமை உடையவர்கள் மற்றவர்களை அடிமைப்படுத்தியுள்ளனர். இரண்டும் இல்லாதவர்கள் பல்வேறு தந்திரங்களால் மற்ற எல்லாரையும் அடிமைப்படுத்தியுள்ளனர். இந்த உண்மை மலேசியா உட்பட தென்கிழக்காசியாவில் வாழ்ந்த மலாய் இனத்தினருக்கும் பொருந்தும்.

சிங்கப்பூரில் சர் ஸ்டாம்போர்ட் ராபிள்ஸுக்கு மொழிபெயர்ப்பாளராய் இருந்த முன்ஷி அப்துல்லா என்ற மலாய் எழுத்தாளர் ஜோகூர், கிளந்தான், திரங்கானு மாநிலங்களில் வாழ்ந்த மலாய்க்காரர்களைப் பற்றியும் அக்கால அரசர்களைப் பற்றியும் நேரில் கண்ட உண்மைகளை எழுதியுள்ளார். ஹிகாயாட் பெலாயாரான் முன்ஷி அப்துல்லா என்ற அந்த நூலில் அவர் சுட்டிக் காட்டிய பல விவரங்கள் இன்று யாராலும் பேசப்படுவதில்லை. அவர் சிங்கப்பூரில் வாழ்ந்ததால் மலாய் அரசர்களுக்கு விசுவாசம் இல்லாதவராக இருந்தார் என்றும் அதனால்தான் மலாய் மக்களையும் அரசர்களையும் அவரால் குறை சொல்லி எழுத முடிந்தது என்றும் முன்ஷி அப்துல்லா விமர்சிக்கப்பட்டார்.

இண்டர்லோக் நாவலை ஆதரித்துப் பேசும் இந்தியக் கல்வியாளர்கள் முன்ஷி அப்துல்லாவும் ஐரோப்பிய ஆய்வாளர்களும் மலாயர் வரலாற்றைப் பற்றி எழுதிய கறுப்பு வரிகளை விளக்கிப் பேச முடியுமா?

இந்தியாவில் பிராமணர் உருவாக்கிய வருணாசிரம கொள்கையை இந்தியாவுக்கு வந்த மேலை நாட்டு அறிஞர்கள் பலவாறாக விமர்சனம் செய்தனர். இவர்களில் கிருத்துவ சமயம் சார்ந்தவர்கள் இந்தச் சமூக ஏற்றத்தாழ்வை மத மாற்றத்திற்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொண்டனர். இந்தியர் பற்றியும் தென்னிந்தியர் பற்றியும் இவர்கள் எழுதிய நூல்களை மேற்கோள்களாகப் போற்றி இந்தியரையும் தமிழரையும் நெடுங்காலமாய்ப் பலர் இழிவுபடுத்தி வருகின்றனர்.

இப்படிப்பட்ட நூல்களை மேற்கோளாகக் கொண்டுதான் இண்டர்லோக் நூலாசிரியர் தனது நூலை எழுதியிருக்க வேண்டும்.

உலகின் எல்லா இனத்தினருக்கும் தங்கள் வரலாற்றில் கறுப்புப் பகுதிகள் உள்ளன. ஆட்சி அதிகாரமும் அனைத்துலக ஆதரவும் கையில் வைத்திருப்பவர்கள் தங்கள் பழைய வரலாற்றை மறைத்தும் மாற்றியும் தங்கள் விருப்பம் போல் எழுதிக் கொள்ள முடியும். மலேசியாவில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் மலாயா வரலாறு படித்தவர்கள் இப்போது உள்ள வரலாற்றுப் பாட நூல்களை எடுத்துப் பார்த்தால் பல விவரங்கள் மாறிப் போயிருப்பதைச் சுட்டிக் காட்டுவர். வரலாற்றை மாற்ற முடியாது என்றாலும் காலத்தின் போக்கு கருதி சில பகுதிகளை மறைத்து வைப்பது எல்லா நாடுகளிலும் இனங்களிலும் இயல்பாய் உள்ளது. மலேசியாவிலும் இது தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்தியரிடையே காணப்படும் வருணாசிரமம், மற்றும் சாதி வேறுபாடுகள், கடந்த 1500 ஆண்டுகளாகத் திருமூலர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் காலந்தொட்டே தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் ஈ.வே. இராமசாமிப் பெரியார், அம்பேத்கார் போன்றோர் சாதியத்துக்கு எதிரான கடுமையான போரை நிகழ்த்தினர். என்றாலும் சாதியின் ஆணி வேர் இன்னமும் அழியவில்லை. நாலாந்தர அரசியல்வாதிகள் தோல்வியின் விளிம்புக்கு வந்துவிட்டபோது சாதியை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்வது வழக்கமாகிவிட்டது. இந்த அரசியல் போக்கு இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கும் பரவிவிட்டது.

மலேசியத் தென்னிந்தியர் மறுப்பதையும் மறக்க விரும்புவதையும் இண்டர்லோக் நாவல் மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. மலாய் இலக்கியங்களில் இந்தியர் இழிவுபடுத்தப்படுவது இது முதல் தடவையல்ல. கடந்த அறுபது ஆண்டுகளாகவே மலாய் எழுத்தாளர்கள் இதனைச் செய்து வருகின்றனர். இண்டர்லோக் பொது வாசிப்புக்கான ஒரு நூலாக இருந்தால் அது குறித்து இந்த அளவுக்குக் கொந்தளிக்க வேண்டி இருக்காது.

மாணவர்க்கு ஆகாது

இண்டர்லோக் நாவலை ஆதரித்துப் பேசுவோர் ஓர் உண்மையை மறந்துவிடுகின்றனர். வயதாலும் கல்வியாலும் முதிர்ச்சி அடைந்த மலேசியர் இண்டர்லோக் நாவலை வாசிக்கும்போது ஏற்படும் விளைவுக்கும் பதினாறு வயது பல இன மாணவர்கள் ஓர் அறையில் அமர்ந்து வாசிக்கும்போது ஏற்படும் விளைவுகளுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.

இதனைப் படிக்கும் மலாய்க்கார மாணவர்கள் இந்திய மாணவர்களைக் கேலி செய்யும் வாய்ப்பு நிறைய உள்ளது. இதுதான் வரலாறு, இதுதான் ‘ரியலிடி’ என்று அவர்களிடம் சொல்ல முடியாது. பறையா என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்பதும் என்ன வரலாற்றுப் பின்னணி என்பதும் முக்கியமல்ல, அது என்ன பொருளில் பயன்படுத்தப்படுகிறது என்பதே முக்கியம். இங்கு இந்தியர்களை இழிவுபடுத்தும் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

மலேசியாவில் வாழும் எல்லா இனத்தினரும் தத்தம் பண்பாடுகளைப் பேணுவதோடு தாம் மலேசியர் என்ற ஒரு நாட்டின் மக்கள் என்ற உணர்வை ஏற்படுத்துவதே சத்து மலேசியாவின் உட்பொருளாய் இருக்க வேண்டும். இண்டர்லோக் சத்து மலேசியா கோட்பாட்டுக்கு எதிரானதாய் உள்ளது.

கடந்த காலங்களில் இந்திய மாணவர்கள் கெலிங் என்று அழைக்கப்பட்டனர். அப்படி அழைத்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எதிராக இந்திய மாணவர்கள் கலவரம் செய்ததுண்டு. எல்லா இன மாணவர்களும் ஒரே பள்ளியில் படித்தால் ஒருமைப்பாடு வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு இடைநிலைப்பள்ளிகளில் இதுவரை நிறைவேறவில்லை. அதற்கான பல காரணங்களில் இப்படிப்பட்ட இன இழிவு சொற்களும் ஒரு காரணம். இனி கெலிங் என்ற சொல்லோடு பறையா என்ற சொல்லும் தாராளமாகப் பயன்படுத்தப்படும். இதனால் இடைநிலைப் பள்ளி மாணவர்களின் ஒற்றுமை சீர்குலையும். தொடர்ந்து இந்திய மாணவர்களிடம் ஏற்படப் போகும் மனோவியல் பாதிப்புகள் குறித்தும் கல்வியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

இந்தச் சொல்லினால் தாம் இழிவுபடுத்தப்படுவதாய் உணரும் மாணவர்கள் இந்த நூலைக் கருத்தூன்றிப் படிக்க இயலாது. இதனால் இந்நூலிலிருந்து எழுப்பப்படும் வினாக்களுக்கு அவர்களால் சரியாக விடையளிக்க முடியாது. இண்டர்லோக் மலாய் மொழிப் பாடத்தின் கட்டாய நூல் என்பதால் மாணவர்களின் தேர்ச்சி பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.

எனவே, இது தென்னிந்தியரின் வரலாறு, ரியலிடி என்று கதைக்காமல் உங்களுக்குள் ஏன் இவ்வளவு சாதிச் சங்கங்கள் என்று கேள்வி எழுப்பாமல் தேசிய ஒருமைப்பாடு, சத்து மலேசியா உணர்வு, மாணவர்களின் ஒற்றுமை, இந்திய மாணவர்களின் மனோவியல் பாதிப்பு ஆகியவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து இந்த நூலை முற்றாகத் தடை செய்ய வேண்டும். அல்லது குறைந்தபட்சம் பாட நூல் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும்.

You can leave a response, or trackback from your own site.

No Responses to “இண்டர்லோக்: உத்துசான் 1மலேசியாவை எதிர்க்கிறது!”

  1. Your comment is awaiting moderation.

    இண்டர்லோக்கை ஆதரிப்பவர்களில் எல்லோருமே “அந்த நாவலை முழுதும் படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள் ; படிக்காமல் பேசாதீர்கள் ” என்கிறார்கள். நான் முழுதுமாய் படித்துவிட்டுத்தான் சொல்கிறேன், அது ” பெரியவர்களுக்கு மட்டுமானது! ” என்று அட்டையிலேயே எழுதப்படவேண்டிய புத்தகம். நாவலாசிரியர் 45 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதாக கூறுகிறார். நாவல் போட்டியில் ஆறுதல் பரிசை வென்றதாகவும் கூறுகிறார். மிக அற்புதமான கருவை கையில் எடுத்ததற்காக அவரைப் பாராட்ட வேண்டும். இந்த நாவலைத் தாம் பள்ளிப்பிள்ளைகளுக்காக எழுதவில்லை , போட்டிக்காகத்தான் எழுதினேன் என்கிறார். ” மணியம் தாழ்த்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட சமூகத்தவர். கப்பலில் பெரும்பாலோர் இவரைப்போன்றவர்களாக இருந்ததால் கப்பல் பிரயாணத்தின்போது எந்த அசௌகரியமோ , தீண்டாமை கொடுமையோ நிகழ வாய்ப்பில்லாமல் போனது!” என்று நாகரிகமாக சொல்லியிருக்கலாம். இன்னும் நிறைய சொல்லலாம் . சீனர்களைப்பற்றிச் சொல்லும்போது, ” பன்றிகள் போல” என்று உவமானம் சொல்லி விளக்குவது காலத்திற்கு பொருத்தமான எழுத்தாகுமா? இதுபோன்ற கடுமையான வார்த்தைகள் உள்ளன. இந்த நாவலில் உள்ள எதையுமே மாற்றியமைக்க நூலாசிரியர் இந்த வயதிலும் ஒப்ப மறுக்கிறார். அவருடைய பிடிவாதம் எழுத்தாளனுக்கே உள்ள பிடிவாதம் என்பதால் எனக்கும் பிடித்திருக்கிறது. “பள்ளிப் பிள்ளைகளுக்காக” என்று வரும்போது அவர் சிந்திக்கவேண்டும். பள்ளிப் பிள்ளைகளுக்காக தம்முடைய நாவலை மாற்றியமைக்க முடியாதென்றால் அவருடைய இண்டர்லோக் நாவலைக் கல்வியமைச்சு திரும்பப் பெற்றுக்கொள்வதுதான் சிறந்த முடிவாகும்!

Wednesday, January 12, 2011

மகாஜருக்குக் காத்திருக்கிறார்கள்

ஜா. சுகித்தா

ஐந்தாம் படிவ மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள இண்டர்லோக் என்ற இலக்கியப் பாடநூல் இந்நாட்டு இந்தியர்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தரப்புகள் இது குறித்த விவாதத்தில் நியாயமாகவும் பாரபட்சமின்றியும் நடந்துகொள்ள வேண்டும் என்று துணைக் கல்வி அமைச்சர் டாக்டர் வீ கா சியோங் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இவ்விவகாரம் குறித்து எந்த ஒரு முடிவும் எடுப்பதற்கு முன்பு மஇகாவின் மகஜருக்காக காத்திருப்பதாக அவர் கூறினார்.

அப்பாடநூல் முற்றாக உடனடியாக மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சிலர் அந்நூலில் காணப்படும் உணர்ச்சியைத் தூண்டும் சொற்களை அகற்றினால் போதுமானது என்றும் கூறுகின்றனர்.

மஇகா தலைவர் ஜி. பழனிவேல் அப்புத்தகம் தடை செய்யப்பட வேண்டியதில்லை. ஆட்சேபத்திற்குரிய சொற்களை அகற்றினால் போதுமானது என்று கூறியுள்ளார்.

மேலும், இதனை உடனடியாகச் செய்ய வேண்டும். இல்லையென்றால், மக்களின் எதிர்ப்பை எதிர்நோக்க வேண்டிய வரும் என்று தெரிவித்துள்ளார். அவருடைய கவனமெல்லாம் தெனாங் சட்டமன்ற இடைத் தேர்தலில் இந்தியர்களின் வாக்குகள் பாரிசானுக்கு எதிராகப் போய்விட்டால் என்னவாகும் என்பதாகும்.

அக்கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் இப்படி ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது குறித்து வருத்தம் தெரிவித்ததோடு கல்வி அமைச்சரிடம் பேசப் போவதாகவும் பின்னர் அந்த அமைச்சுக்கு கடிதம் எழுதப் போவதாகவும் கூறியிருந்தார்.

ஆனால், துணைக் கல்வி அமைச்சர் மஇகாவின் மகஜருக்காக காத்திருப்பதாக நேற்று கூறுகிறார்.

மஇகா இந்நாட்டு அரசாங்கத்தின் ஓர் அங்கம். அம்னோ மற்றும் மசீச ஆகியவற்றோடு மஇகாவுக்கும் இந்நாட்டு அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் சமமான பொறுப்புண்டு. கல்வி அமைச்சு எடுக்கும் முடிவும் நடவடிக்கைகளும் அரசாங்கத்தின் முடிவும் நடவடிக்கைகளுமாகும். அரசாங்க கொள்கைகளும் அவற்றின் அமலாக்கங்களும் அமைச்சரவையின் முழுப் பொறுப்பு ஆகும்.

இப்போது, கல்வி அமைச்சு அனுமதித்திருக்கும் இலக்கியப் பாடநூல் இண்டர்லோக் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பதற்றத்திற்கு அமைச்சரவை பொறுப்பாகும். அமைச்சரவையில் மஇகா இடம் பெற்றுள்ளது. ஆக, மஇகாவும் இதற்குப் பொறுப்பாகும்.

மேலும், இந்நூல் வெளியிடப்பட்டது குறித்து வருத்தப்படுவதோடு அதன் விளைவுகள் குறித்து அச்சம் தெரிவிக்கும் மஇகா, இந்நூல் வெளியிடப்படுவதற்கு முன்பே ஏன் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை? அரசாங்கத்தின் ஓர் அங்கமான மஇகாவுக்கு இந்நூல் குறித்த தகவல் எதுவும் கொடுக்கப்படவில்லையா? கலந்தாலோசிக்கப்படவில்லையா? அல்லது, மஇகா ஒரு பொருட்டாக மதிக்கப்படுவதில்லையா?

இந்திய சமூகத்தைப் பாதிக்கும் அரசாங்கத்தின் எந்த ஒரு முடிவுக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகுதான் மஇகா கவனம் செலுத்தத் தொடங்குகிறது.

எஸ்பிஎம் தேர்வுக்கான பாடங்கள் குறித்த விவகாரத்திலும் இதே நிலைதான். மண முறிவு பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் இஸ்லாமிய பெண்களுக்கு அரசாங்கம் உதவ முன்வந்தபோது, அதே நிலையில் இந்தியப் பெண்களுக்கு ஏன் உதவி இல்லை என்ற குரல் எழுந்த பிறகுதான் மஇகா வாயைத் திறந்தது. இப்பிரச்னைகள் தீர்க்கப்பட்டு விட்டனவா என்பது வேறு கேள்வியாகும்.

இந்திய சமூகத்தின் மூச்சாக அரசாங்கத்தில் அங்கம் பெற்றுள்ளதாக கூறிக்கொள்ளும் மஇகா இந்த இண்டர்லோக் விவகாரத்தில் அதன் நிலை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு மசீச துணைக் கல்வி அமைச்சர் இன்னும் காத்திருப்பதாக கூறுவது இந்திய சமூகத்தின் தலைவர்கள் இது பற்றி எதுவுமே கூறியதில்லை என்பதோடு எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது என்று கூறலாம்.

இந்திய சமூகத்தை இழிவுபடுத்தி எழுதப்பட்டிருக்கும் இந்நூலை மாணவர்களுக்கு இலக்கியப் பாடநூலாக பயன்படுத்த அனுமதி அளித்ததன் காரணமாக ஏற்பட்டிருக்கும் பதற்றத்திற்கு கல்வி அமைச்சின் துணை அமைச்சரான மசீசவின் வீ கா சியோங்க்கும் முழுப் பொறுப்புண்டு. செய்யக்கூடாததைச் செய்துவிட்டு இப்போது இவ்விவகாரத்தை நியாயமாகவும் பாரபட்சமின்றியும் விவாதிக்க வேண்டும் என்று தத்துவம் பேசுகிறார்.

ஓர் இனத்தை இழிவுபடுத்தி இளவயதினரின் சிந்தனையில் இனத் துவேசத்தைத் திணிப்பு தவறு என்று கூறும் மஇகா மகஜர் வரும் வரையில் இவர் காத்திருக்க வேண்டுமா?

இந்நாட்டிற்கு சீனர்கள் தங்களுடைய உடலை விற்க வந்தவர்கள் என்று இனவாதியான நசீர் கூறியபோது குதித்தெழுந்த மசீசவின் பிரதிநிதியான துணைக் கல்வி அமைச்சருக்கு இண்டர்லோக் பாடநூலில் மணியம் இதர இந்தியர்களைப்போல் தன்னுடைய மனைவியின் பாதுகாப்பு பற்றி கவலைப்படவில்லை என்று எழுதப்பட்டிருப்பதின் உள்நோக்கத்தைத் தெரிந்துகொள்வதற்கு மஇகாவின் மகஜர் தேவைப்படுகிறது!

கல்வி அமைச்சரைப் பற்றி எதுவும் கூறவேண்டியதில்லை. அவர் ஓர் இன மலேசியாவின் ஏகபோகத் தலைவர்.

மஇகா ஓர் எதிர்க்கட்சிபோல் செயல்படாமல், ஓர் ஆளுங்கட்சியாகச் செயல்பட வேண்டும். போராட்டம் நடத்துவது, மகஜர் கொடுப்பது எதிர்க்கட்சியின் முக்கியமான செயல்முறையாகும். ஆளுங்கட்சி அதன் அரசாங்கத்துடன் போராட்டம் செய்வதில்லை, அதனிடம் கோரிக்கை விடுப்பதில்லை. சொன்னதைச் செய்ய வேண்டியது அதன் கடமையாகும். மஇகாவிற்கு அக்கடமை உண்டு.

ஆளுங்கட்சியான மஇகா இண்டர்லோக் பாடநூலை ஏன் அனுமதித்தது என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும். இப்பிரச்னையை அது தீர்க்கத் தவறினால், அரசாங்கத்தை விட்டு வெளியேறுமா என்பதையும் அறிவிக்க வேண்டும்.

You can leave a response, or trackback from your own site.

5 Responses to ““இண்டர்லோக்” பாடநூல்: மஇகாவின் மகஜருக்காக காத்திருக்கிறாராம் துணைக் கல்வி அமைச்சர்”

  1. tamil says:

    ஐயோ நீங்க எவளவு சொன்னாலும் அவுங்க
    ஸ்டைலே வேறங்க ,ஒண்ணுமே நடக்காது
    ஜால்ரா ஆ வெரிகுட் …….

  2. sharama says:

    அவதூறு வழக்கு போடலாம்.ம இ கா செய்யுமா?மன்னரிடம் முறையிடலாம். வாக்களிப்பில் எண்ணத்தைத் தெரிவிக்கலாம்.அடுத்த முறை இன்னும் மோசமாக இன்னொரு புத்தகம் வருமே? என்ன செய்யலாம்?

  3. malaysia tamilan says:

    MIC yin sagunikaleh..niggal ehllam manitharkal taanah..!! Un kudumpathai..un manaviyai pesukiran-ehluthukiran unnaku suudu-soranai illaiyah..!! Alathu awan interlok kil ehluthiyathu unnmaithanah..? apadiyendral un kudumpathai kaaka mudiythi neer (MIC) intha tamil samuthayathai kaaka pokiraiyah..!! Maanamkehdavaneh..!!

  4. எதிர்காலத்தில் நமது பிள்ளைகளை, நம்மை மதிக்காத – உதாசீனப் படுத்தும் கல்விமுறையை கற்கும்படிச் செய்யவேண்டுமா? நமது ஆணிவேரையே அசைக்கும் முயற்சி முன்னேடுக்கப்படுவதைக் காண்கிறோம்.நாம் கண்களை மூடிக்கொண்டு வெறுமனே இருக்கப்போகிறோமா? நமக்கு உணர்வே இருக்காது என்ற திமிரா? இவர்களால் மாத்திரம்தான் நாலாந்தர நாவல்களை எழுத முடியுமா? நம்மால் எழுதமுடியாதா? முடியாமலல்ல நமக்கு எதை எப்படி எழுதவேண்டும் என்பதெல்லாம் தெரியும் . பண்பாடு தெரிந்தவர்கள் நாம். பண்பாடற்றவர்களிடம் இன்னும் எத்தனைகாலம்தான் அதை எதிர்பார்த்துக் காத்திருப்பது? இந்தியனே … இன்னும் ஏன் உறக்கம்? தமிழர் சங்கம் , தெலுங்கர் சங்கம், மலையாளி சங்கம் , சீக்கியர் சங்கமென்று வைத்துக் கொள்வதெல்லாம் ஊறுகாய் போடுவதற்கா? சிதறு நெல்லியாய் நம்மை சிதைக்க நினைக்கும் அரசியல் அயோக்கியத்தனத்தை முறியடிக்க வேண்டாமா? சந்தற்பவாதிகளாய் இன்னும் எத்தனைக் காலங்கள் காத்திருக்கப் போகிறீர்கள்?

  5. Mano says:

    I feel ashame on u Dato Wee Ka Siong !!!…I read you press statement recently in which u said that “Interlok” contains nothing sensitive or false statements against Indians and we Indians are Protesting for our own political interests on this book…And for you,Do something for save our dignity which is shaken now…..if cant do anything just keep shut up….and dont make our Indians provoked because of your statements….
    And Mr.Murugiah,Eventough im not a pilitician and not interest in politics and stuffs,I as a Indian just done my part because its insulted and touched my dignity, self-respect ready and time for me to wake-up to protect my dignity…..part of it we as “Johore Indians” had organize a all Indian NGO meeting last week in Johor to talk about the issue and we came out with decision to fight till the end for the ban of the book….soon you all Malaysian Indians will know the outcome of Johore Indians NGO’s decision regarding this book….Its more to diplomacy as well…
    And for you dato Wee Ka Siong, remember we are not racist for asking this book to be ban…..because if this book in use, Indians will be backwards 40 years as our new generations(Including Chinese,Malay,Indians) will be strongly planted about the Casts and stuffs and also the bad opinions about the Indian natives in Malaysia in which we will be back to the Malaysian Indians life 40 years ago in rubber estates…….

Leave a Reply

மனோவியல் போர்

-முனைவர் ஆறு. நாகப்பன்

இந்தியர்களும் சீனர்களும் “பெண்டாதாங்”. இந்த நாட்டின் வந்தேறிகள். இவர்கள் சட்டப்படியான குடிமக்கள் என்றாலும் இந்த நாட்டின் பூமிபுத்ராக்கள் அல்லர், வந்தேறிகள் மட்டுமே. ஆகையால் பூமிபுத்ராக்களுக்கு நிகரான உரிமைகளை எதிர்பார்க்கக் கூடாது. அடிப்படை வாழ்வியல் உரிமைகளுக்காகப் போராடவும் கூடாது என்ற கருத்தை எதிர்கால மலேசியர் மனத்தில் பதியச் செய்யும் நீண்ட கால செயல்திட்டத்தின் ஒரு பகுதியே இண்டர்லோக் நாவல்.

இந்தியர், சீனர்களிடம் “வந்தேறிகள்” என்ற கருத்தைத் திணிக்கும் அதே சமயத்தில் மலாய்க்காரர்களிடம் மலாய் மேலாண்மை என்னும் கோட்பாடு ஊட்டப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் தீவிரமடைந்திருக்கும் இந்த மனோவியல் போர் இந்தியர், சீனர்களுக்கு எதிர்மறையான விளைவுகளையும் பூமிபுத்ராக்களுக்கு உடன்பாடான விளைவுகளையும் உருவாக்கி வருகிறது.

இதற்கான செயல்பாடுகள் நாடாளுமன்றம் முதல் தொடக்கப் பள்ளிகள் வரை திட்டமிட்டபடி நிறைவேறி வருகின்றன. நாடாளு மன்றத்தில் இந்திய, சீன உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் அமைச்சர்கள் மலாய்க்காரர் அல்லாதவர் நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்று கூறுகின்றனர்.

அம்னோ மாநாட்டில் மூத்த அமைச்சர் ஒருவர் கிரீசைத் தூக்கிக் காட்டி அதனை முத்தமிட்டு உறையில் இட்டது மலாய்க்காரர் அல்லாதார்க்கு எதிரான வெளிப்படையான போர்ப் பிரகடனம் என்றே கருத முடிகிறது.

பள்ளிகளில் மலாய்க்காரர் அல்லாத மாணவர்களைப் பார்த்து “அவரவர் தாய்நாட்டுக்குத் திரும்பிப் போய்விடுங்கள்” என்று சொல்லப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. நெகிரிசெம்பிலான், லுக்குட் இடைநிலைப்பள்ளியில் எஸ்.பி.எம். தேர்வின் முதல் நாள் தேர்வு விதிமுறைகளை விளக்கிக் கூறிய தலைமைத் தேர்வு கண்காணிப்பாளர் இந்திய மாணவர்களைப் பார்த்து “நான் சொன்னது விளங்கியதா, விளங்காவிட்டால் இந்தியாவுக்குப் போய்விடுங்கள்” என்று கூறியுள்ளார். அதேபோல் சீன மாணவர்களைப் பார்த்து உங்களுக்குப் புரியாவிட்டால் சீனாவுக்குப் போய்விடுங்கள் என்று கூறியுள்ளார்.

மற்ற மாணவர்களைப் போன்று இந்திய மாணவர்கள் குறும்புகளோ குற்றங்களோ செய்யும்போது அதற்கான தண்டனைகளாக இன இழிவுச் சொற்களால் திட்டுவதோடு செருப்பால் அடிப்பது போன்ற தண்டனைகளையும் கொடுக்கின்றனர்.

கடந்த ஆண்டு நடந்த தேசிய சேவைப் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு இண்ட்ராப் போராட்டக் காட்சிகளைப் படமாகப் போட்டுக் காட்டி இவர்கள் இந்த நாட்டின் அமைதியைக் கெடுக்கும் தீவிரவாதிகள் என்று திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. இதன் மூலம் இந்தியர்கள் கலகக்காரர்கள் என்ற கருத்து இளைய மலேசியர் அனைவரின் உள்ளத்திலும் புகட்டப்பட்டுள்ளது.

இப்படித் தொடரும் மனோவியல் போரின் ஒரு வியூகம்தான் இண்டர்லோக் நாவல். இந்தியரும் சீனரும் இந்த நாட்டின் வந்தேறிகள் என்ற கருத்தை ஒரே சமயத்தில் இளைய மலேசியர் அனைவர் உள்ளத்திலும் புகுத்துவதன் மூலம் பூமிபுத்ரா மாணவர்கள் மண்ணின் மைந்தர் என்னும் இன உணர்வை பெறுவார்கள். இந்திய, சீன மாணவர்கள் எதிர்காலத்தில் தங்கள் நாட்டைப் பறித்துக் கொள்ளக் கூடும் என்ற அச்சத்தை பூமிபுத்ராக்களிடம் உருவாக்குவதும் தங்கள் உரிமைகளைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வை அவர்களிடம் வளர்ப்பதும் இந்த நாவலின் அடிப்படை நோக்கமாய் உள்ளதைக் காண முடிகிறது.

இந்த நாவல் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாவது தொடர்ந்து பாடநூலாக இருக்கும் வாய்ப்புண்டு. ஒவ்வோர் ஆண்டும் ஐந்தாம் படிவத்தில் பயிலும் பல ஆயிரம் மாணவர்கள் இதனைப் படிப்பார்கள். ஐந்து ஆண்டுகளில் எத்தனை ஆயிரம் மாணவர்கள் இந்த நூலைப் படிக்க வேண்டியிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். 2011 பொதுத் தேர்தலுக்குப் பிறகு வரும் அடுத்த பொதுத் தேர்தலின்போது இந்த நாவலைப் படித்த புதிய வாக்காளர்கள் மனநிலை எப்படி மாறியிருக்கும் என்று இப்போதே நம்மால் ஊகிக்க முடிகிறது அல்லவா?

கடந்த 2007 நவம்பர் 25 ஹிண்ட்ராப் போராட்டத்திற்குப் பின் பாரிசான் அரசு கடுமையான சோதனையை எதிர்கொண்டு வருகிறது. 2008 பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்த பின் அடுத்து வரப்போகும் பொதுத் தேர்தலில் பாரிசான் தொடர்ந்து ஆட்சியைக் கைப்பற்றுவதில் ஏற்பட்டிருக்கும் தடைகளை எண்ணிப் பெரும் கலக்கத்தில் இருக்கிறது.

பாக்காதான் சீனர்களின் 80 விழுக்காட்டு ஆதரவையும் இந்தியர்களின் ஏறத்தாழ 50 விழுக்காட்டினர் ஆதரவையும் பெற்றிருப்பதாக அதன் தலைவர்கள் கூறி வருகின்றனர். நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் கிராமப்புறத்து இந்திய, மலாய்க்காரர்களின் வாக்குகளால் மட்டுமே பாரிசான் வெற்றி பெற்றுள்ளது. மற்ற இடங்களில் தோல்வி அடைந்துள்ளது. பாக்காதான் தொடர்ந்து சீனர், இந்தியர்களின் வாக்குகளைக் கவர்ந்து வருகிறது. இந்நிலையில் பாரிசானின் வெற்றி வாய்ப்பு மலாய்க்கார்களின் கைகளில் மட்டுமே இருக்கிறது.

எனவே, மலாய்க்காரர்களில் இளம் வாக்காளர்களைக் கவரும் கட்டாயம் பாரிசானுக்கு ஏற்பட்டுள்ளது. மலாய்க்காரர் அல்லாத மாணவர்களும் இளைஞர்களும் பள்ளிகளில் உயர்கல்வி வாய்ப்பு, கல்வி நிதி போன்றவற்றில் புறக்கணிக்கப்பட்ட அனுபவத்தைப் பெற்றுள்ளனர். எனவே இனியும் அவர்களின் ஆதரவைப் பாரிசானுக்கு எதிர்பார்ப்பது இயலாது என்பதைத் தெரிந்து கொண்டதால் அம்னோ அரசு மலாய் மாணவர்களின் ஆதரவை ஒட்டுமொத்தமாக ஈர்க்கும் அதிரடித் திட்டமாக இண்டர்லோக் நாவலைக் களம் இறக்கியுள்ளது.

அம்னோ தலைவர்கள் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் பாஸ் தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருவதையும் மாநில சுல்தான்களின் ஆதரவை இதற்குக் கருவியாகப் பயன்படுத்துவதையும் கவனித்தால் மலாய்க்காரர்களின் ஒட்டுமொத்த ஆதரவைத் திரட்டுவதை முதல்நிலைத் தேர்தல் வியூகமாக அமைத்து அம்னோ செயல்பட்டு வருவதை உணர முடிகிறது.

இப்போது வரப்போகும் பொதுத்தேர்தலுக்குப் பயன்படாவிட்டாலும் அடுத்து வரும் பொதுத் தேர்தலில் புதிய வாக்காளர்களை ஈர்க்கும் முயற்சிக்கு இண்டர்லோக் கட்டாயம் துணை செய்யும். விவசாயத்தில் உடனே பயன் தரும் பயிர்களும் உண்டு, சில காலம் கழித்துப் பயன் தரும் பயிர்களும் உண்டு. இண்டர்லோக் சில காலம் கழித்து அம்னோவுக்குப் பயன் தரும் பயிராய் இருக்கும். இந்தியர், சீனர்கள் மீது திட்டமிட்டு அம்னோ தொடுத்திருக்கும் இந்த மனோவியல் போரினால் இது நிச்சயம் சாத்தியமாகும்.

Friday, January 7, 2011

இண்டர்லோக்கில் இனவாதம்

னைவர் ஆறு. நாகப்பன்

கல்வி அமைச்சின் அதிகாரிகளோடு நடந்த கலந்துரையாடலில் ஒரே வாரத்தில் இண்டர்லோக் நாவல் மீட்டுக் கொள்ளப்படும் என்று பிரதமர் துறை துணை அமைச்சர், அறிக்கை வேந்தர் முருகையா அறிவித்தார். டிசம்பர் 16இல் மக்கள் ஓசையில் வண்ணப்படமாக செய்தி வந்துவிட்டதால் அவரைப் பொருத்தமட்டில் அவர் பெரும் சாதனை செய்துவிட்டார். துணைப்பிரதமர் முகைதீன் யாசினுக்குக் கடிதம் எழுதப் “போகிறேன்” என்று அறிவித்த அளவில் அமைச்சர் டத்தோ டாக்டர் சுப்ரமணியம் அவர் கடமையைச் செவ்வனே செய்துவிட்டார்.



இண்டர்லோக் பாடப்புத்தமாகப் பள்ளிகளுக்குப் போய்விட்டது. இந்த நூலைக் கல்வி அமைச்சு மீட்டுக் கொள்ளுமானால் அதை எதிர்த்துப் பெரிய அளவிலான போராட்டத்தை நடத்தப் போவதாக மலாய் அமைப்புகள் அறிவித்துள்ளன. அப்படியான ஒரு போராட்டத்தை அவர்கள் நடத்தாவிட்டாலும் கல்வி அமைச்சு இதனை மீட்டுக் கொள்ளாது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

இழிவுபடுத்துவது மட்டுமல்ல நோக்கம்

இண்டர்லோக் விவகாரம் வெளிப்பட்டவுடன் அதன் கதைத்தலைவன் மணியம் பறையன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை மட்டுமே கண்டனம் செய்து ஆரவாரிக்கின்றனர் நமது சமூக ஆர்வலர்கள். உண்மையில் அந்த ஒரு சொல்லைக் கூட மன்னித்து மறக்கலாம். அதைவிடவும் அக்கதையின் நோக்கம் மிகுந்த ஆபத்தானதாக உள்ளது.

நூலில் உள்ள நான்கு பகுதிகளில் முதல் மூன்று பகுதிகள் மலாய், சீனர், இந்தியர் ஆகியோரின் வரலாற்றுப் பின்னணிகளை விவரமாகக் கூறுகின்றன. மலாயர் இந்த மண்ணின் மைந்தராய் வந்தாரை வாழ வைக்கும் தாராள சிந்தையுடைவராய்க் காட்டப்படுகின்றனர். சீனரும் இந்தியரும் பிழைப்பு தேடி மலாயாவுக்கு வந்தவர்கள் என்ற கருத்து வலியுறுத்தப்படுகின்றது. சீனர்கள் மலாய்க்காரர்கள் நிலத்தை கையகப்படுத்திக் கொள்வதாகவும் மலாய்க்காரர்களில் சிலர் நிலமும் வீடும் இன்றித் தவிப்பதாகக் கதை போகிறது. அந்நியர்களிடமிருந்து நாட்டையும் தங்கள் வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொள்ள மலாய்க்காரர்கள் ஒன்றுபட வேண்டும் என்று குரல் எழுப்பப்படுகிறது.

இவர்களில் தென்னிந்தியரின் வரலாற்றுப் பின்னணி தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தென்னிந்தியாவில் மிகுந்த வறுமையில் வாடினர். சாதி அடிப்படையிலான தொழில்களையே அவர்கள் செய்ய முடியும். சுதந்திரமாக எந்தத் தொழிலும் செய்ய முடியாது. ஆகவேதான் பறையர் என்ற தாழ்த்தப்பட்ட மக்கள் மலாயாவுக்குப் பிழைப்பு தேடி வந்தனர். கதைத்தலைவன் மணியம் கேரளாவின் திருச்சூர் என்னும் பகுதியிலிருந்து நாகப்பட்டினம் வந்து கப்பல் ஏறி மலாயா வருகிறான். எல்லாரும் பறையராக இருந்தமையால் கப்பலில் ஒருவரோடு ஒருவர் இடித்துக் கொள்வதற்கு அவர்கள் கூச்சப்படவில்லை. கப்பலில் அவர்கள் ஆடுகளைப் போல் அடைத்து வைக்கப்பட்டனர்.

மலாயாவில் அவர்கள் தோட்டங்களிலும் நகர்ப்பகுதிகளில் கூலிகளாக வேலை பார்த்தனர். மணியம் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். அப்போது கேரளாவில் அவனுடைய நண்பனாக இருந்த சுப்பையா என்பவன் மணியத்துக்கு ஏற்கனவே கேரளாவில் மனைவி இருக்கிறாள் என்ற கூறி மணியத்தின் குடும்ப வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறான். உண்மையில் மணியத்தின் மனைவி இன்னொருவனோடு ஓடிப் போய்விடுகிறாள். சுப்பையாவோடு தகராற்றில் ஈடுபட்ட மணியத்தை தோட்டத்து துரை துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்துகிறான். தோட்டத்து மருத்துவ உதவியாளர் காயத்துக்குக் கட்டுப் போடுகிறார். தோட்டத்து மக்கள் உதவுகின்றனர். இப்படி முடிகிறது மணியனின் கதை. கதையின் தொடக்கத்தில் வருந்தி உழைத்தால் வராதது இல்லை என்று படைப்பாளர் குறிப்பிடும் பொன்மொழிக்கும் கதைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

மணியத்தின் குடும்பத்தினர் என்னும் கதையின் முற்பகுதி தென்னிந்தியாவிலும் பிற்பகுதி மலாயாவிலும் நடைபெறுகிறது. இந்த இரண்டு பகுதிகளில் எந்தப் பகுதியாவது தேசிய ஒற்றுமைக்குத் துணையாய் இருக்க முடியுமா என்று சிந்தித்துப் பாருங்கள். இரண்டாவதாக வரும் சீனக் குடும்பத்தைப் பற்றிய கதையும் ஏறத்தாழ இப்படியே அமைந்துள்ளது. நான்காவது பகுதியாகிய “இண்டர்லோக்” சீனர்க்கும் இந்தியர்க்கும் மலாய்க்காரர்கள் கருணையோடு உதவி தேசிய ஒற்றுமைக்கு வழி காணுவதாக முடிகிறது.

மூன்று இனத்தினருக்கிடையில் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் நோக்கில் இந்த நூல் எழுதப்பட்டது என்று வாதிப்போர் ஒரு விஷயத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். இருநூறு ஆண்டுகளுக்கு முன் சீனரும் இந்தியரும் இந்த நாட்டுக்கு எப்படி வந்தனர் என்ற வரலாற்றுப் பின்னணி நாளைய மலேசியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எப்படிப் பங்களிக்க முடியும் என்ற கேள்விக்கான பதிலில்தான் இந்த நாவலின் நோக்கம் வெளிப்படுகிறது

மனோவியல் போர்

சாதியக் கொடுமையால் பல சமூகச் சீர்கேடுகளோடு வாழ்ந்த தென்னிந்தியர் மலாயாவுக்கு வந்து இன்று வளமாக வாழ மலாய்க்காரர்கள் ஆதரவளித்தனர். இதற்காக இன்றைய இந்தியர் மலாய்க்காரர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இந்தியர்களும் சீனர்களும் வந்தேறிகள். ஆகவே, மலாய்க்காரர்களின் சிறப்பு உரிமைகள் மீது கேள்வி எழுப்பக் கூடாது. கிடைப்பதை வாங்கிக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். உரிமைப் போராட்டம் எதுவும் நடத்தக் கூடாது. இக்கருத்துகளை இடைநிலைப் பள்ளி மாணவர்களின் மூளையில் திணிப்பதே இந்த நாவலின் நோக்கமாய் இருப்பது தெளிவாகிறது.

அப்படியல்ல, தேசிய ஒருமைப்பாடுதான் நோக்கம் என்றால் சீனரும் இந்தியரும் இந்த நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்குக் கடுமையாக உழைத்ததையும் பலர் உயிர்த் தியாகங்கள் செய்ததையும் சொல்லியிருக்கலாம். பிரிட்டிஷ் முதலாளிகளால் சுரண்டப்பட்டதால் தங்கள் தாய் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாமல் இந்த மண்ணுக்கு உரமாகிப் போன கதைகளைச் சொல்லியிருக்கலாம்.

அல்லது, மலாய் இனமும் மொழியும் மலாய் என்ற பெயரைப் பெறுவதற்கு முன்பே முதலாம் நூற்றாண்டில் தென்கிழக்காசிய நாடுகளுக்கு வந்த இந்தியர்கள் தமிழ், சமஸ்கிருதச் சொற்களால் மலாய் மொழியை வளப்படுத்தியும் வணிகத்தாலும் பண்பாட்டாலும் இந்தப் பகுதியை மேம்படுத்தியும் ஆற்றிய பங்களிப்பைச் சொல்லியிருக்கலாம். (Drs Ismail Hussein, Sejarah pertumbohan bahasa kebangsaan kita, ms 7-12, DBP 1966)

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த வரலாற்றைச் சொல்லாமல் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பந்தக் கூலிகளாய் வந்த தென்னிந்தியர் இந்தியாவிலும் மலாயாவிலும் கொண்டிருந்த சமூகப் பண்பாட்டு அமைப்பை இழிவாக விவரிப்பதற்கு வேறு என்ன நேர்மையான காரணங்களை இவர்கள் கூற முடியும்?

பறையா என்ற ஒரு சொல்லுக்கு மட்டும் கண்டனம் தெரிவிக்கும் இந்திய சமூக ஆர்வலர்கள் கதையை முழுமையாகப் படித்து நூலின் திரண்ட நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். படைப்பாளர் வெளிப்படையாகக் காட்டும் காட்சிகள் மூலம் மறைமுகமாக உணர்த்தும் கருத்துகளை உய்த்துணர வேண்டும்.

இந்தப் பாட நூல் வகுப்பில் கற்பிக்கப்படும்போது அந்த வகுப்பில் மலாய் மாணவர்களோடு இந்திய சீன மாணவர்களும் இருப்பார்கள். இந்திய, சீன சமூகத்தினரின் மலாயா வருகை பற்றி நூலில் உள்ள விஷயங்களை ஆசிரியர் எப்படியெல்லாம் விளக்குவார், மலாய் மாணவர்கள் எந்தெந்தக் கோணங்களிலெல்லாம் உரையாடல்களை எடுத்துச் செல்வார்கள் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். அந்த வகுப்பில் இருக்கும் இந்திய, சீன மாணவர்களின் மனம் புண்படும் அளவுக்கு உரையாடல் வளரும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

இந்திய, சீன மாணவர்களை அவமானப்படுத்துவதன் மூலம் அவர்களைத் தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாக்குவதும் எதிர் காலத்தில் தங்கள் உரிமைகளுக்குப் போராடும் ஆற்றல் இல்லாதவர்களாக அவர்களை ஆக்குவதும் கல்வி அமைச்சின் உள்நோக்கம் என்பதை உணர முடியும். ஆக இந்திய, சீன மாணவர்கள் மீது அம்னோ தீவிரவாதிகள் தொடுக்கும் ஒரு மனோவியல் போர் இது என்பது தெளிவு. இந்த முடிவுக்கு வருவதற்கு அண்மைக் காலத்தில் அரசு அதிகாரிகள் உதிர்க்கும் இனவாத உரைகளைச் சான்றாகக் காட்டலாம்.

கடந்த பத்தாண்டுகளில் இனவாதம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ந்துள்ளது. அம்னோ பேரவைகளில் மலாய் மேலாண்மை அழுத்தமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் பூமிபுத்ரா ஆசிரியர்கள் வெளிப்படையாகவே சீன, இந்திய மாணவர்களை “நீங்கள் வந்தேறிகள், உங்கள் நாட்டுக்குப் போய்விடுங்கள்” என்று பேசி வருகின்றனர். தமிழ், சீனப் பள்ளிகளை முடிவுக்குக் கொண்டு வரும் கருத்தில் ஒரே பள்ளி முறை மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது. இவை அனைத்தையும் இண்டர்லோக் நூலின் உள்ளடக்கத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மலாய் மேலாண்மையைப் பள்ளி மாணவர்களிடம் வலியுறுத்துவதே இந்த நூலின் நோக்கம் என்பது தெளிவாகிறது.

அம்னோவின் இனவாதத்துக்கு இசைவாக இந்த நூல் அமைந்துள்ளது. மலாய் இனவாதிகளின் குரலை இலக்கியம் என்ற பெயரில் மாணவர்களின் செவிகளுக்கு எட்டும்படிச் செய்யும் முயற்சியே இது. இந்த நூலை மீட்டுக் கொள்ள மறுப்பதானது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான செயல் ஆகும்.

You can leave a response, or trackback from your own site.

8 Responses to ““இண்டர்லோக்கில்” இனவாதம்!”

  1. vasman says:

    பாரிசன் அம்னோ அரசாங்கம்,இவர்களின் மாண்டோர்கள்… MIC , INTERLOK நாவல் பற்றி கவலை பட மாட்டார்கள் !!,இவர்களுக்கு பதவி பட்டம் ,ஆ ட்சி இவைகள்தான் முக்கியம் ,PKR …இந்திய மண்டோர்களுக்கு எதை பற்றியும் கவலையில்லை !! நாடாளும் மன்றத்திலோ ,வெளியிலோ தமிழனை ,….தமிழ் மொழியை…. பற்றியோ !பேசினால் அடுத்த தேர்தலில் மலாய் காரர்களின் ஒட்டு , போய்விடும் என்ற பயம் !!! தேர்தலுக்குள் கொஞ்சம் அரிசி ,20.வெள்ளி ஹெம்பேர் .கொடுதால் ,நாய் போல் வாழை ,ஆட்டிக்கொண்டு 3 மாததில் எல்லாவற்றையும் மறந்து விட்டு ஒட்டு போட்டு விடுவார்கள் என்ற ,அம்னோ BN ,அரசாங்கத்தின் கூற்றை உண்மையகிவிடுவர்கள் !!!! பவம் தமிழன் ,மீண்டும் அடிமை வாழ்க்கை ….25 /NOV /2007 ஏன் தமிழன் உரிமைக்காக போராடினான் நாயை விட கேவலமாக நடதபட்டான் ,யாரால் இந்த் ஆட்சி கிடைத்தது எதை பத்ரியும் யாருக்கும் கவலை இல்லை ….மானம் உள்ள தமிழா !!! எழுந்திரு !!!!

  2. Palanivell says:

    the book is written to embrass Malaysian Indians and Chinese

  3. ravi says:

    manamulla tamilan bn arasangattu oottu pooda mattan. appadi pottal avan oru sutta manangkette paraiyan

  4. malikraj says:

    there are few things we need to look why the book at school.
    1.this is truly politic sendiwara(trend)
    2.MIC with new leadership (preplan)
    3.this is to get indians confident on mic for bn after next drama
    4.before TENANG election bn will announce ban this book all over malaysia
    5.the next …………etclah

  5. நேத்ரா says:

    உண்மைதான்.. திடீரென்று புத்தகம் மீட்டுக்கொள்ளப் பட்டதாக அறிவிப்பு செய்வார்கள்.. தமிழர் உள்ளமெல்லாம் குளிர்ந்து போகும்.. பாரிசானுக்கு ஓட்டு போடுவார்கள்.. பரிசான் வெல்லும்.. மீண்டும் போராட்டம் வரும்.. இப்படியே தான் நமது கதை ஒடிக் கொண்டிருக்கிறது.. போர்ட்டிக்சன் பகான் பினாங்கில் பிஎன்னுக்கு ஓட்டு போட்ட நாய்கள் இப்போது செருப்படி படுகின்றன… ஆனாலும் புத்தி வராது..

  6. keerthan aananthan says:

    arumai yana poiyai unmaiyaka vendum endru namathu BN arasangam alagaaga nadagam nadathik kondirukkirathu!!!
    BN ku vote podu vathu peritalla aanal nammil yettanai perukku intha naval lil ulla vishayam terinthirukkum endru naam aaraya vendum….20% mattume intha visyama nammil terinthirukku…vittil suntv mun amarnthu antha katayai maru naal vivathikkum maathiri intha visha yattai nammavargalil palar seiya tavari vittanar.Bn arasangattai kurai kuri oru projanamum illai….nammai naame kurai kuri kolla vendum…naam muthalil nammai sutri enna nadakirathu endru terinthukolla vendum illaiyel nammai innum muttal aaki kondiruppargal….
    veetil suntv paarpathai nirutti vittu itharku enna thirvu kaana mudiyum endru ella indiyanum yosikka vendum…illaiyel ithu naladai vil makki mannaaga poi vidum enbathu en karuttu!!!

  7. vinthai says:

    mr ravi need not use the word”manangetta paraiyan”. the whole issue also about caste. please all tamilans avoid casteism. use the word tamilan. this does not reflect the lives of tamilans in malaya or malaysia. it creates conflicts amoung tha races. it needs to be replaced with any other useful book.

  8. venu says:

    Nobody have the right to say “paraiah”.The book must take back by Goverment….Malaysia malay also not 100% origin,they come from INDONESIA…ask them write about this…bullshit….Who is “IBRAHIM ALI”?malaysia PM or chief jugde?better he keep his mouth shut….WHY WY happen to malaysia indian…WE not support each other……….

  9. Your comment is awaiting moderation.

    ஐயா, நாவலின் ஆணிவேரை இனங்காட்டிவிட்டீர்கள்! அவர்களின் உள்நோக்கம் என்ன ? அவர்களின் இதய மாசு என்ன? என்பதையெல்லாம் இந்த நாவலைக்கொண்டு எப்படி நிறைவேற்றிக்கொண்டார்கள் என்பதை சரியாக படம்போட்டுக் காட்டிவிட்டீர்கள். இந்தக் கட்டுரையை தயைகூர்ந்து ஆங்கிலப் நாளிதழில் வெளியிட்டு அவர்களின் போலி முகத்திரையை கிழித்தெறியவும். ஒன்றைப்பற்றி கருத்துரைத்தால் நுனிப்புல் மேயக்கூடாது. உங்களைப்போன்றவர்கள் நிறைய எழுதவேண்டும். வாழ்த்துகள்.

Wednesday, January 5, 2011

தமிழர்களை இழிவுபடுத்து இண்டர்லோக்

தேசிய விருது பெற்ற எழுத்தாளரால் மாணவர்களுக்காக எழுதப்பட்டு இந்த ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இலக்கியப் பாடநூல் இண்டர்லோக் இந்தியர்களை “பறையா” என்று வர்ணித்துள்ளது. அச்சொல்லும் அதுபோன்ற இதர சொற்களும் அகற்றப்பட்டால் போதுமானது. அப்புத்தகம் தடை செய்யப்பட வேண்டியதில்லை என்று சில இந்திய அரசியல் தலைவர்கள் மன்றாடுகிறார்கள்.

“பறையா” என்று சொல் ஒரு புறமிருக்கட்டும். இப்புத்தகத்தை எழுதிய தேசிய விருது பெற்ற ஆசிரியர் இந்நாட்டு இந்தியர்கள் ஒவ்வொருவரின் பிறப்பை, தன்மானத்தை, தாயின் மானத்தை, கற்பைக் கேள்விக்குறியாக்கி இழிவுபடுத்தி விட்டார்.

இப்பாட நூலைப் படிக்கப்போகும் ஒவ்வொரு இந்திய மாணவனின் தகப்பன் யார் என்ற கேள்வியை எழுப்பும் இலக்கியப் படைப்பு இது.

இதோ ஒன்று:

“Maniam seperti orang India yang lain, tidak pernah khuatir tentang keselamatan isterinya”
(பக்கம் 218).

மற்ற இந்தியர்களைப்போல தன் மனைவியின் பாதுகாப்பைப்பற்றி மணியமும் கவலைப்பட்டதே இல்லை.

இதன் கருத்து என்ன? உள்நோக்கம் என்ன? இது இந்தச் சொல், அந்தச் சொல் பற்றிய விவகாரம் அல்ல.

இதுபோன்ற இன்னும் சிலவற்றை கிள்ளான் அருண் பட்டியலிட்டுள்ளார். அவற்றைப் படியுங்கள்:

“இண்டர்லோக் – INTERLOK – இழிவின் மாற்றுருவம்”

2011-ஆம் ஆண்டு முதல் ஐந்தாம் படிவத்திற்கான மலாய்மொழி இலக்கியப்பாட நூல்கள் மாற்றப்பட்டுள்ளன. “இண்டர்லோக்” (INTERLOK) என்னும் தலைப்பில் அமைந்துள்ள நூல் மலாய் இலக்கியப் பாடத்திற்குரிய நூலாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டு முதற்கொண்டு மலாய் இலக்கியப்பாட மாணவர்கள் இந்நூலைப் படித்து ஆய்வு செய்வர். மலாயாவிற்கு வந்த தென்னிந்தியர்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் அடங்கிய குறுநாவல் ஒன்று இந்நூலுள் உள்ளது. “மணியம் குடும்பத்தார்” (Keluarga Maniam) என்னும் தலைப்பில் இக்குறுநாவல் எழுதப்பட்டுள்ளது. எழுபத்தைந்து பக்கங்களைக் கொண்ட இக்குறுநாவல் தமிழர்களை இழிவுபடுத்தும் நோக்கத்திற்காக எழுதப்பட்டுள்ளது.

அப்துல்லா உசேன் (Abdullah Hussain) என்பவர் இந்நாவலை எழுதியுள்ளார். அப்துல்லா உசேன் இந்நாட்டின் தேசிய இலக்கியவாதிகளுள் Sasterawan Negara yang kelapan – 1996) ஒருவராவார். இந்நாவல் பல்வேறு வடிவங்களில் தமிழர்களின் எதிர்ப்பை எதிர்நோக்கியுள்ளது. தமிழர்களின் வாழ்வியலை இடித்துரைக்கும் நோக்கில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளதாகப் பலர் சொல்கின்றனர். தமிழினத்தை ஒட்டுமொத்தமாக இழிவு செய்கின்றது என்னும் கருத்தும் சொல்லப்படுகின்றது.

இண்டர்லோக்கில் உள்ள குறுநாவலால் இந்நாட்டுத் தமிழர்களின் மனம் ஒட்டுமொத்தமாகப் பாதிப்புற்றுள்ளதை மறுப்பதற்கில்லை. ஒரே மலேசியா, ஒரே இனம், ஒரே பண்பாடு, ஒற்றுமையே நம் வாழ்வு என்றெல்லாம் ஓதிக்கொண்டிருக்கும் இந்நாட்டில் இத்தகைய நாவல் எழுதப்பட வேண்டியதன் தேவையென்ன? இத்தகைய நாவலைப் பள்ளி மாணவர்களுக்குரிய பாடநூலாக்குவதற்கான தேவையென்ன? ஒன்றுமே புரியவில்லை, என்னும் குரல்தான் உரக்க ஒலிக்கின்றது.

சாதியம் தொடர்பான செய்திகள் இந்நாவலுள் விரவியுள்ளன. இஃது இந்நாட்டுத் தமிழர்களை இழிவுபடுத்கின்றதென தமிழ்ச் சார்புடய ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால், இந்நாவலுள் சாதியம் மட்டுமே குறிக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக, பல்வேறு கோணங்களில் தமிழர்களின் வாழ்வியலும் பண்பாட்டுக்கூறுகளும் இழிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. இதற்குரிய சான்றாக இந்நாவலுள் குறிக்கப்பட்டுள்ள செய்திகள் கீழுள்ளவாறு தொகுக்கப்பட்டுள்ளன:

Mereka yang dari arah ke utara sedikit bercakap bahasa Malayalam atau Telugu, tetapi hampir semuanya tahu bahasa Tamil. Malayalam dan Telugu pun berasal dari satu rumpun bahasa Dravidia. Satu perkara besar yang membuatkan mereka senang berkaul adalah kerana mereka tergolong dalam satu kasta Paria. (பக்கம் 211)

மலையாளிகளும் தெலுங்கர்களும் வடக்குப் பகுதியிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்குத் தமிழ்மொழி தெரியும். மலையாளமும் தெலுங்கும் திராவிடமொழிக் குடும்பத்தைச் சார்ந்தனவாகும். இவர்கள் அனவரும் இயல்பாகப் பழகுவதற்குரிய காரணம்; இவர்கள் எல்லாரும் பறையர் சாதியச் சேர்ந்தவர்களாகும்.

Mereka tidak perlu takut akan mengotori sesiapa kalau bersentuhan. (பக்கம் 211)

யாரையும் தொட்டால் தீட்டாகுமென இவர்கள் பயப்பட வேண்டியதில்லை.

Mereka berasak-asak seperti kambing . (பக்கம் 211)

ஆடுகளைப்போல முண்டியடித்தனர்.

Disini, pekerjaan yang membezakan kasta tidak ada. (பக்கம் 216)

சாதி வேறுபாட்டை உணர்த்தும் வேலைகள் இங்கில்லை.

Kuli-kuli Cina itulah yang lebih banyak mendapat kesempatan. Maniam mengakui bahawa mereka lebih pantas bekerja dan sedikit bicara. (பக்கம் 218)

சீனக் கூலிகளுக்கு அதிகமான வாய்ப்புக் கிட்டுகின்றது. அவர்கள் சுறுசுறுப்புடன் வேலை செய்வதோடு குறைவாகவும் பேசுகின்றனர் என்பதை மணியம் ஒப்புக் கொண்டான்.

Maniam seperti orang India yang lain, tidak pernah khuatir tentang keselamatan isterinya. (பக்கம் 218)

மற்ற இந்தியர்களைப்போல தன் மனைவியின் பாதுகாப்பைப்பற்றி மணியமும் கவலைப்பட்டதே இல்லை.

Dia gembira hidup di negeri ini kerana untuk pertama kali dalam hidupnya dia berasa dirinya sebagai manusia seperti orang lain. (பக்கம் 218)

தன் வாழ்வில் முதல் முறையாகத் தானொரு மனிதன் என்பதை உணர்ந்ததால் அவன் இந்நாட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்தான்.

Disini dia tidak sahaja bebas bercampur gaul dengan orang lain sama sebangsanya, malah dia tidak takut dengan pantang larang yang terdapat di negaranya apabila seorang India daripada kasta rendah menyentuh orang India daripada kasta tinggi. (பக்கம் 218 – 219)

இங்கு அவன் தன் இனத்தாருடன் சுதந்திரமாகப் பழகுவதோடு தன் நாட்டிலுள்ள சமூகக் கட்டுப்பாடுகளுக்கு அச்சமுற வேண்டியதில்லை. அங்குக் கீழ்சாதியினர் உயர்சாதியினருடன் பழகுவதில்லை.

Dia tidak sahaja dimaki hamun dengan kata-kata yang kesat, malah disisihkan daripada masyarakat sehingga dirinya dan orang-orang yang sekasta dengannya menjadi lebih hina daripada. (பக்கம் 219)

கடுஞ்சொற்களால் ஏசுவதுமின்றி அவனையும் அவன் சாதியினையும் ஒதுக்கிவிடுவர். மிருகங்களைப்போல இழிவுபடுத்திடுவர்.

Di negeri ini, orang daripada keturunan kasta tinggi, kasta Brahma memakai punul yang melintang di tubuh, tetapi dia tidak takut menyentuh orang itu. (பக்கம் 219)

இந்நாட்டில் உயர்சாதி மக்களான பிராமணர்கள் பூணூல் அணிந்திருப்பர். ஆனால், இவர்களைத் தொடுவதற்கு அவன் அஞ்சுவதில்லை.

Dia boleh membeli barang daripada penjaja dengan memberikan wang dari tangan ke tangan; tidak seperti seperti di negaranya, dia mesti meletakkan wang itu di suatu tempat dan penjaja itu akan menyiram wang itu dengan air sebelum diambil dan dimasukkan ke dalam petinya. (பக்கம் 219)

வணிகனிடமிருந்து பொருள் வாங்கும்போது கையாலேயே பணத்தைக் கொடுக்கலாம். அவன் நாட்டில் அவ்வாறில்லை. பணத்ததக் குறிப்பிட்ட ஓரிடத்தில் வைத்துவிட வேண்டும். பின்னர் வணிகன் அப்பணத்தின் மீது தண்ணீர் ஊற்றித் தூய்மை செய்தபிறகு பெட்டிக்குள் போட்டான்.

Apatah pula lembu ialah binatang suci bagi orang Hindu; dan kalau binatang itu mati, seperti ibunya sendiri yang mati. (பக்கம் 220)

இந்துக்கள் மாட்டினைப் புனிதமாக எண்ணுகின்றனர். அம்மிருகம் இறந்தால் தம் தாய் இறந்ததுபோல கருதுகின்றனர்.

Tidak makan tengah hari tidak mendatangkan masalah, asalkan dia dapat mengunyah sirihnya seperti lembu atau kambing memamah biak. (பக்கம் 224)

பகல் உணவு உண்ணாவிடில் சிக்கல் ஏதுமில்லை. ஆடு, மாடுகளைப்போல அசைபோடுவதற்கு வெற்றிலை கிடைத்தால் போதும்.

Setelah menjalani beberapa upacara yang meletihkan, maka pesta perkhawinan Maniam dan Malini pun berakhir. (பக்கம் 229)

சோர்வு ஏற்படுத்தும் சடங்குகளுக்குப் பின்னர் மணியம் மாலினி இருவரின் திருமணம் நிறைவுற்றது.

Dia gertak sahaja, orang kulit hitam ini tentu takut kecut. (பக்கம் 253)

அவன் (வெள்ளைக்காரன்) மிரட்டினால் போதும் இந்தக்ழன்) பயந்துவிடுவான்.

Suppiah menerpa ke hadapan dan sujud di kaki orang putih…… Lantas, dia menendang Suppiah. Suppiah terjungkir. (பக்கம் 256)

முன்னே வந்து வெள்ளக்காரன் காலில் விழுந்து கும்பிட்டான் சுப்பையா…… வெள்ளக்காரன் சுப்பையாவை எட்டி உதைத்ததால் அவன் சுருண்டு விழுந்தான்.

Dia berasa bangga kerana anjing orang putih itu jinak dengannya. (பக்கம் 276)

வெள்ளக்காரனின் நாய் தன்னுடன் சாதுவாகப் பழகுவது அவனுக்குப் பெருமையாக இருந்தது.

1900-ஆம் ஆண்டிலிருந்து நாடு விடுதலைப் பெற்றது வாயிலாக மலாய்க்காரர், தமிழர், சீனர் ஆகிய மூவினத்தாரிடயே நிலவிய தொடர்பினையும் ஒற்றுமையினையும் தெளிவுறுத்தும் நோக்கத்திற்காக இந்நாவல் எழுதப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால், அடிப்பட நோக்கம் அஃதன்று என்னும் உண்மையை மேற்காணும் குறிப்புகளின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். ஓர் இனத்தாரையும் அவர்கள் சார்ந்துள்ள பண்பாட்டினையும் இழிவு செய்வதற்கு இவ்வளவு போதாதா? இதற்கு என்ன சாக்குப்போக்குச் சொல்லவிருக்கின்றனர்?

ஒற்றுமையே நம் வாழ்வு, நம் பண்பாடு, என முழங்கிக் கொண்டிருக்கும் இந்நாட்டின் கல்வியகங்களில் எத்தகைய சிந்தனகள் புகுத்தப்பட வேண்டுமென்னும் தெளிவற்றிருக்கின்றோம். இது வியப்பிலும் வியப்பாக இருக்கின்றது.

ஒரு நூலைப் பள்ளிப்பாட நூலாகத் தேர்வு செய்வதற்கு எத்தனைத் தரப்பினர் எவ்வளவு காலம் உத்தேசித்திருக்க வேண்டுமென்னும் தெளிவு நமக்கு உண்டு. கல்வி அமைச்சர் முதற்கொண்டு பள்ளிப் பாடநூல் தேர்வுக்குழுவினர் வரையிலாக இதில் ஈடுபட்டுள்ளனர். எத்தனை அதிகாரிகள் இந்நாவலைப் படித்திருப்பர்? எத்தனனப் படிநிலைகளைத் தாண்டி இந்நாவல் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்நாவல் தேர்வு தொடர்பாக ஈடுபட்டிருந்தோருக்கு நாவலின் உள்ளடக்கம் தமிழர்களின் வாழ்வியலையும் மனதையும் பாதிக்குமெனத் தோன்றவில்லையா!

ஏதோவொன்று எங்கோ இடிக்கின்றதல்லவா? வாழ்க ஒரே மலேசியா! வளர்க நம் ஒற்றுமை! பெருகத் தமிழர்களின் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை¨!

You can leave a response, or trackback from your own site.

14 Responses to “இண்டர்லோக் இலக்கியப் புத்தகம் இந்திய தாய்மார்களின் தூய்மையை இழிவுபடுத்துகிறது”

  1. சிவசங்கர் says:

    இந்நாட்டில் இந்திய வம்சாவளியைச் சார்ந்தவன் என்று சொல்லிக் கொள்வதில் நான் என்றுமே சங்கடப்பட்டதில்லை. ஆனால் எனது இனத்தை இத்தனை இழிவாக வருணிக்கப்பட்டதைக் கண்டு கொந்தளித்து போயிருக்கிறேன். ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இந்நாவலை எத்தனை இந்திய ஆசிரியர்கள் போதிக்கப் போகின்றனரோ! ‘ஒரே மலேசியா’ இது போன்று சங்கடங்கள் தரும் வரை வெற்றியடையப் போவதில்லை, நான் ஆதரிக்கப் போவதுமில்லை.

  2. mahendran says:

    shocking to read this …

  3. குடிமகன் says:

    தேசிய இலக்கியவாதி எழுதியிருத்தால் அதில் தேசியம் இருக்க வேண்டும். அவர் சாதி துவேசம் அல்லவா எழுதியிருக்கின்றார். அவர் தேசிய இலகிகியவாதியல்ல. தேசிய துவேசவாதி. அவருடைய இந்த இண்டர்லோக் என்ற படைப்பை எரியூட்ட நினைப்பதில் தவறில்லை. அரசாங்கம் இப்புத்தகத்திற்கு தடைவிதித்து மீட்டுக்கொள்ள வேண்டும். ஒற்றை மலேசியாவை ஆதரிக்கும் ம.இ.கா அமைச்சர்கள் பதவியில் இருந்து என்ன பயன்? -குடிமகன்-

  4. mvpara says:

    those u wrote tis , is real idiot.muttal .muttal thane ingga atti seigiran

  5. Rani says:

    யாரை சொல்லி என்ன பயன்? நம்மிடையே ஒற்றுமை இல்லாமையே மற்ற இனத்தார் வாய்ப்பாக ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஒட்டு மொத்த இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கிறோம் என்று உரக்க கூறிகொள்ளும் ம. இ. கா. என்ன செய்து கொண்டிருகின்றது… அது என்ன செய்ய முடியும், பணம் பதவி மட்டுமே கிடைத்தால் போதும் என்று தானே அவர்கள் பதவியில் இருகிறார்கள்… பாவம் நம் தமிழினம், காப்பாற்ற யாரும் இல்லை… காலம் தான் பதில் சொல்ல வேண்டும்…

  6. Manogaran A/l Munusamy says:

    Saya terperanjat YB Wee Ka Siong Dalam penemubualannya hari ini menegaskan bahawa secara peribadinya beliau beliau tidak menemui ‘cacat-cela’ pada kandungan buku tersebut dan Unsur-unsur yang menyentuh sensitiviti seperti didakwa hanyalah tafsiran dangkal segelintir pihak.
    Adakah beliau cuba mengatakan bahawa memang betul kesemua orang India yang datang ke Malaysia pada masa itu adalah Pariah dan memang betul seperti yang dikatakan layanan kita di India pada masa itu…kalau Orang cina dikatakan begitu adkah dia sanggup menerimanya dengan mengatakan tiada apa apa unsur cacat cel di buku itu….Yb Wee ka Siong perlu meminta secara terbuka untuk kenyataan ini.Begitu juga kenyataan oleh Malaysiakini yang mengatakan India Melenting dan kandungan Interlok tidak melampau dan berasas.Saya ingin menegurkan orang yang menulis kenyataan itu di Malaysia.com. veris melayu pada 5hb January.Mereke juga perlu tampil meminta maaf kepada Kaum India seluruh negara kerana menulis tanpa mengambil kira perasaan kaum India di negara ini.Silalah menganggap anda sebagai kaum india dan fikir perasaan kami.Adakah anda tidak terguris dengan kenyataan oleh Interlok????…..

  7. cm says:

    Pada pendapat saya ini adalah satu perkara mudah. Masyarakat India merasai novel ini menghinakan mereka dan banyak NGO, individu dan pemimpin memohon JASA BAIK KERAJAAN MALAYSIA melarang atau memperbetulkan kandungan novel tersebut. PM yg melaung laungankan SATU MALAYSIA & Timbalan menteri pula MENTERI PENDIDIKAN befikir panjang utk tarik balik novel ini atau membetulkan kandungan. Adakah KERAJAAN mengalami kerugian berbillion billion dgn tarik balik novel ini? Apakah muslihat yg sembunyi dlm kandungan novel ini sehingga ada pihak bermati mati mempertahankan novel ini. Siapakah memberi hak untuk melukan hati org lain? Biar PEMIMPIN kita IKHLAS dgn konsep SATU MALAYSIA. Pemuda masa depan sdg memerhatikan segala galanya. Adakah Masyarakat India harus memohon sedekah dpd KERAJAAN utk menjaga maruah sendiri? We r very hurt “BAPA satu MALAYSIA you are continue allowing others to hurt us. If you have no heart to protect us is fine, pls don’t HURT us.

  8. Dutchess says:

    What is the meaning of “One Malaysia” if you can’t have an open mind to think. Do you want to produce more racist youngsters in future and bid goodbye to the “One Malaysia” concept, then continue publishing it. It’s the 21st century. Look up at people’s achievements, not condemning them. The funniest part is MIC is doing nothing but snoozing. Why are they not doing their duties? Are they expecting someone to pay money to solve this problem? Ladies and gentlemen, wake up before it’s too late. I’m not being a racist here, but condemning other society will only cause havoc and its unnecessary. Enough damage done.

  9. முதல்வர் says:

    *f… off lah stupid coconut who wrote this book…memang bodoh suka2 je padai tulis,,,kalau banga lain tulis banga melayu apamacam..sudah isu besar……bodohX1000000000 ~

  10. cm says:

    Sorry lah bro, this is not something new, MIC is tied dogs.

  11. Kaasu says:

    அந்த இனத்தில் பிறந்த நான் பெருமைப்படுகிறேன்

  12. s.maniam says:

    even former malaysian prime minister Dr .Mahathir Mohamad also keturunan india, is he a paraya, if yes then all the malays in malaysia also parayas.
    please stop this nonsence and if the goverment dont stop this novel all the indians in malaysia have to gather infront of ministry of education and burn the novel.

  13. desan says:

    Penulis buku tidak sedar sensitiviti sesuatu kaum. Kalaupun benar apa yang dia tulis bukan semua yang benar boleh ditulis untuk bacaan umum! Saya hairan bagaimana panel pemilihan buku untuk sekolah boleh meluluskan buku ini? Adakah semua ahli panel BODOH? Ahli panel mesti terdiri dari 3 kaum. Baru boleh faham sensitiviti sesuatu kaum. SUDAH MENJADI LUMRAH SASTERAWAN DAN AHLI POLITIK SERING MENGHINA KAUM INDIA DAN KAUM CINA DAN AGAMA. KALAU MENGHINA ORANG MELAYU DAN ISLAM SATU NEGARA BERGELORA. MANALAH ADIL?

  14. அறவேந்தன் says:

    இந்த அப்துல்லா உசேனின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதைப் பள்ளியில் ஒரு பாடப் புத்தகமாக அனுமதித்திருப்பது, மலேசியக் கல்வியமைச்சின் மாபெரும் தவறாகும். அதை இன்னமும் மீட்டுக் கொள்ளாமலிருப்பது ஏன்?

    இது ஒரு புறமிருக்க, நாமும் இதற்கு ஒரு வகையில் காரணம்தானே.
    நம்மில் எத்தனை பேர் சாதியை விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறோம்? எத்தனையோ குடும்பங்களில் சாதி இன்னமும் இருக்கின்றது. திருமணக் காலங்களில், திருமண அழைப்பிதழ்களில், இதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.

    இந்த ”இலக்கிய நாவலை” எதிர்ப்பவர்கள் யாவரும் முதலில் தங்களின் இல்லத்திலிருந்தும் உள்ளத்திலிருந்தும் சாதியை நீக்க வேண்டும்.
    செய்வார்களா?
    இந்த நாட்டில் சாதிச் சங்கங்கள் காளான்கள் போல் முளைப்பதற்கு யார் காரணம்?

    சாதிச் சங்கங்களையும் நீங்களே நடத்துவீர்கள்.
    பிறகு, இதுபோல் ஏதேனும் நடந்துவிட்டால், குறை கூறுவதெதற்கு?, என்று அவன் கேட்டால், என்ன சொல்லப் போகிறோம்?

    சிந்திப்போமா?