Friday, September 19, 2014

தமிழினம் உண்மையிலேயே உருப்பட வேண்டுமா?


பார்ப்பனியத்தைப் போற்றும் பார்ப்பான் இருக்கும்வரை பார்ப்பனியம் இருக்கும்.
பார்ப்பனியம் இருக்கும்வரை சாதியம் இருக்கும்.
சாதியம் இருக்கும்வரை  சாதிய ஆரியத்தமிழன் இருப்பான்.
சாதிய ஆரியத்தமிழன் இருக்கும்வரை இந்துத் தமிழன் இருப்பான்.
இந்துத் தமிழன் இருக்கும்வரை சுயமரியாதையுள்ள தன்மானத் தமிழன் இருக்கமாட்டான்.
தன்மானம் இல்லாத தமிழன் இருக்கும்வரை….
தமிழனிடை ஒற்றுமை என்பது சுட்டுப்போட்டாலும் வராது.
தமிழரிடை ஒற்றுமை இல்லாதவரை  தமிழினத்தால் எதையும் சாதிக்கவே முடியாது.
தமிழினத்திற்குச் சாதனை இல்லாதவரை…
தமிழினம் சீரழிந்து, சின்னாப்பின்னமாகி நாசத்தைச் சந்திப்பதை
எவராலும் , எந்தக் கொம்பனாலும் தடுக்கவே முடியாது.
இதைத்தான் எங்கள் வெண்தாடி வேந்தன்  சாகும்வரைப் பாடாய் பாடினான்…
இறுதி மூச்சுவரை  எடுத்தெடுத்துச் சொன்னான்…
ஆனால்…
எந்தத் தமிழன் கேட்டான்?
நான் இங்கே சவாலாகச் சொல்கிறேன்…
சாதியை ஒழிக்காமல் உண்மை தமிழனை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது. 
உண்மை தமிழன் இல்லாமல்…
உண்மையான
இனவழி தமிழ்நாடும் இல்லை…
இனவழி தமிழ் ஈழமும் இல்லை…
வேண்டுமானால்…
ஆரியத்தமிழ் ஈழம் சாத்தியம்.
ஏற்கனவே … எப்போதோ… ஆரியத்தமிழ் நாடு சாத்தியமாகி வேர்விட்டு விழுதுகள் பரப்பி ஓங்கி வளர்ந்துவிட்டது. 

இந்த வாசகங்களின் ஆழத்தைப் புரிந்து முன்னேற ஆரியத் தமிழனுக்கு பல யுகங்கள் தேவைப்படலாம். அதுவரை எல்லாம் கனவுகளே!

No comments:

Post a Comment