மனிதன் உணர்வற்றவனாகவும் , அறியாமை மிக்கவனாகவும் இருப்பது நல்லதல்ல. உணர்வற்ற மனிதனால் தனக்கும் மற்றவர்க்கும் துன்பமே விளையும்; அரசியலிலும் குடும்பத்திலும் தனிமனித வாழ்கையிலும் பெரும் மன உளைச்சலையும் நிர்வாக சீர்குளைவையும் உண்டாக்கும்.
உணர்வற்றவர்கள் அதிகபட்சமாக கொலை செய்வார்கள்; பிறரைச் சுடு சொற்களால் துக்கப்படுதுவார்கள்; ஒருவரின் வாழ்க்கை ஆதாரத்தையே ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்கள். இவர்கள் தங்களின் அறியாமையினாலே பிறருக்கு எப்போதும் அவமானத்தையும் துன்பத்தையும் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.
ஒரு சம்பவம், ஒரு பொருள் , ஒரு காட்சி உங்களுக்குள் உணர்வினை எழுப்பவில்லை என்றல் உங்களுக்கு உணரும் ஆற்றல் இல்லை என்று பொருள் . உங்களால் உணரமுடிந்து நல்லுணர்வை வளர்த்துக்கொண்டால் நீங்கள் நல்லவராகவும் கெட்ட உணர்வினை வளர்த்துக்கொண்டால் கெட்டவர்களாகவும் இருப்பீர்கள்.
அடித்தால் வலிக்கிறதே...! நாம் பிறரை அடிக்கிறோமே ... அவர்களுக்கும் வலிக்குமே ... அவர்களும் துன்புறுவார்களே ... எனும் உணர்வு மேலோங்கி இருந்தால் ஓர் உயிரையும் துன்புறுத்தலாகாது எனும் உணர்வு மேலோங்கி வளரும் . அது உயர்ந்தோரின் பண்புமாகும்.
ஒருவரின் செயலைப் பற்றியோ ஒன்றைப் பற்றியோ புரிந்துகொள்வதில் தவறு ஏற்படின் அது தவறான புரிந்துணர்வாகும். இந்தத் தவறான புரிந்துணர்வின் காரணமாக முன்னெடுக்கப்படும் செயல்பாடுகளால் நாம் பிறருக்குத் துன்பம் விளைவிக்கிறோம் . ஆக , நன்மை செய்தால் நன்மையும் தீமை செய்தால் தீமையும் விளையும் எனும் உணர்வு எப்போதும் நமக்கு இருக்கவேண்டும் .
நல்லுனர்வுகளால் பண்படாதவன் முரடனாகவும் காட்டுமிராண்டியாகவும் இருக்கிறான். இவனுடைய செயல்பாடுகளால் பிறருக்கு ஏற்படும் துன்பத்தைக்கூட உணரமுடியாதவனாக இருப்பான். உணர்வுகளை உரசிப்பார்க்கும் திறனோ பக்குவமோ இல்லாது இருப்பான். இதனால்தான் சிறு பிள்ளையாக இருக்கும்போதே நல்லுணர்வுகளால் வளர்க்கப்படவும் பழக்கப்படவும் வேண்டும் என்று நமது நீதி நூல்கள் வலியுறுத்துகின்றன .
யூதர்கள் பழமையான அறிவுக்கொவ்வாத சடங்காசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கடவுள் சித்தத்திற்கு புறம்பாக வாழ்ந்துகொண்டிருந்த பொது அதை கண்டித்த ஏசுவின் அன்பையும் இரக்கத்தையும் உணரமுடியாத யூதர்கள் கொடூரமாக துன்பப்படுத்தி அவரைக் கொலை செய்தனர். மத வெறியும் பணவெறியும் ஆடம்பரவெறியும் யூதர்களை உணர்வற்றவகளாக்கியது; அவர்களின் உணர்வுகளை சாகடித்துவிட்டது. ஏசுவின் வாக்கின்படி அவர்கள் ஆவியில் மரித்தவர்களாக இருந்தனர்.
உடலில் உயிர் இருந்தால்மட்டும் போதாது. உணர்வுகளால் வளம்பெற்று இருக்கவேண்டும்; மேம்பாடு அடைந்த்திருக்கவேண்டும். நல்லுணர்வுகளால் மேம்படுத்தப்பட்ட ஓர் உயிரைத்தான் நவீன உலகம் மனிதராக ஏற்றுக்கொள்ளும்; நாகரிகம் மனிதனென்று சொல்லும்.
தாயின், சகோதரர்களின், சமூகத்தவரின் அன்பைப் புரிந்துகொள்ள முடியாதவரை; உணரமுடியாதவரை எப்படி உணர்வுள்ளவர் என்று சொல்லமுடியும்? ஓர் அரசு செய்யும் நல்லச் செயலைக்கூட உணர்ந்து மதிக்கத்தெரியாத மனிதனை எப்படி நல்ல பிரஜையென்று ஒப்புக்கொள்ளமுடியும்?
மனிதனாகப் பிறந்தும் உணர்வற்று இருப்பவர்களை ஆவியிலே ஜீவனில்லாதவர்கள், மரித்தவர்கள் , நடைபிணங்கள் என்று உணரமுடிந்ததினால்தான் தன்னைக் கொடூரமான முறையில் கொலைசெய்தவர்களை , " பிதாவே... இவர்கள் அறியாமல் செய்யும் பாவத்தை மன்னியும்..." என்று யேசுவால் வேண்டிக்கொள்ள முடிந்தது; அவர்களை மன்னிக்கவும் முடிந்தது.
நல்லுணர்வுகளால் தங்களை மேம்படுத்திக்கொண்டு தங்களுடைய மனதையும் செயலையும் காத்துக்கொள்ளும் மனிதர்கள் உயர்ந்த வாழ்க்கைக்கு உரியவர்களாகிறார்கள்.
சாதிய உணர்வு, மத உணர்வு, மொழியுணர்வு, சமூக உணர்வு, இயக்க உணர்வு , நாட்டுணர்வு என்று பல உணர்வுகளின் தாக்கத்திற்கு மனிதர்கள் ஒவ்வொரு நாளும் ஆளாகக்கூடும். இப்படிப்பட்ட சூழலில் எந்த உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பது எனும் ஞானம் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.
சாதிய உணர்வு இந்தியர்களிடையே அதிகமாக இருக்கிறது. இந்த சாதி உணர்வினால் நமக்கு நன்மையா? தீமையா ? என்று பகுத்தாயும் உணர்வு இல்லாத காரணத்தினால்தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் நாடிழந்தோம், நகரிழந்தோம், பேர் இழந்தோம் , புகழ் இழந்தோம்.
உணர்வற்றவர்களின் ஆதாயத்திற்காக வலிவிழக்கவும், மானத்தை இழக்கவும் நேர்ந்தது. இவர்களுக்காக சாதிய உணர்வு வளர்க்கப்பட்டு நம்மினம் கூறுபோடப் பட்டது. " தமிழினம் எப்படிப்போனால் என்ன ... சிதறுண்டு சினாப்பினமானாலென்ன...
எனக்கு என் சாதிதான் முக்கியம்" என்று இருப்பவர்களை என்னவென்பது?
உலகத்தைப் பாருங்கள்... மற்ற இன மக்களைப் பாருங்கள் ... அவர்களின் மேன்மையைப் பாருங்கள்... இறுதியாக நம்முடைய சாதி உணர்வையும் சீர்தூக்கிப் பாருங்கள்...! ஒட்டு மொத்த தமிழினத்திற்கு சாதியுணர்வு சரி பட்டுவருமா? என்று யோசித்துப் பாருங்கள்! சரிபடவில்லைஎன்றால் கைவிடுங்கள்..!
மத உணர்வு எப்படி? அன்பை அடிப்படையாகக் கொள்ளாத எந்த மதத்தையும் ஒதுக்கித் தள்ளுங்கள் ...அன்பின் சாயல் படராத பல ஏற்பாடுகள் மதங்களில் காண்கிறோம். மத உணர்வு மனிதனைப் பிளவுபடுத்த அல்ல என்பதை எப்போதுமே மனதில் இருத்துங்கள்...!
மொழியுணர்வு தேவைதான? மொழி உண்மையிலேயே போற்றப்படல் வேண்டுமா? மொழியுணர்வு இல்லா இனம் அழிந்துவிடுமா? சிந்தித்துப் பாருங்கள்...
உலக மொழி என்றும் தேசமொழி என்றும் தாய்மொழி என்றும் இன்று உலக அரசியல் மனிதர்களை ஆட்டிப்படைக்கிறது. தொடர்பு மொழியாகவும் உலகமொழி யாகவும் ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு ஒவ்வொருவருக்கும் தாய்மொழியைப் படிக்கும் வாய்ப்பை வழங்கினால் என்ன?
ஒருவன் தன்னுடைய தாய்மொழியை விட்டுக்கொடுத்துவிட்டு தேசியத்தில் ஒன்றுபடவேண்டும் என்பது நியாயமா? என் தாய்மொழியில் என்னுடைய கலை, கலாச்சாரம் , பண்பாட்டுக்கூறுகள் என்று எல்லாம் இருக்க நான் என்னுடைய தாய்மொழியை இழக்க சம்மதித்தால் நான் என் முகவரியை இழந்துவிடமாட்டேனா? என் இனம் அழிந்துவிடுமே? எப்படி சம்மதிப்பேன் என்று வீறுகொண்ட உணர்வு பெருக்கெடுக்க நான் உணர்வுள்ளவனாக இருப்பது அவசியம்மல்லவா?
உணர்விலாதவர்கள் எதை இழக்கவும் சம்மதிப்பார்கள். மொழி போனால் என்ன? உரிமை இழந்தால் என்ன ? எதைக்கொடுத்தல் என்ன? கொடுக்காவிட்டால் என்ன? உணர்விழந்து கிடப்பார்கள்...! இப்படிப்பட்டவர்களின் செயலை வருங்கால சந்ததிகள் சபிப்பார்கள் என்பதுமட்டும் நிச்சயம்...!
இரா- ஜெகவீரப்பாண்டியன்.
உணர்வற்றவர்கள் அதிகபட்சமாக கொலை செய்வார்கள்; பிறரைச் சுடு சொற்களால் துக்கப்படுதுவார்கள்; ஒருவரின் வாழ்க்கை ஆதாரத்தையே ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்கள். இவர்கள் தங்களின் அறியாமையினாலே பிறருக்கு எப்போதும் அவமானத்தையும் துன்பத்தையும் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.
ஒரு சம்பவம், ஒரு பொருள் , ஒரு காட்சி உங்களுக்குள் உணர்வினை எழுப்பவில்லை என்றல் உங்களுக்கு உணரும் ஆற்றல் இல்லை என்று பொருள் . உங்களால் உணரமுடிந்து நல்லுணர்வை வளர்த்துக்கொண்டால் நீங்கள் நல்லவராகவும் கெட்ட உணர்வினை வளர்த்துக்கொண்டால் கெட்டவர்களாகவும் இருப்பீர்கள்.
ஒருவர் உணர்வற்றவராக இருந்தால் அவருக்கு நல்லுணர்வு வளராது. நல்லதையும் கெட்டதையும் பகுத்துணர முடியாதவராக இருப்பார் . இதைச் செய்தால், இதைச் சொன்னால் இது நடக்கும் எனும் எதிர் விளைவுகளைப் பற்றிய ஞானம் இல்லாது இருப்பர்.
அடித்தால் வலிக்கிறதே...! நாம் பிறரை அடிக்கிறோமே ... அவர்களுக்கும் வலிக்குமே ... அவர்களும் துன்புறுவார்களே ... எனும் உணர்வு மேலோங்கி இருந்தால் ஓர் உயிரையும் துன்புறுத்தலாகாது எனும் உணர்வு மேலோங்கி வளரும் . அது உயர்ந்தோரின் பண்புமாகும்.
ஒருவரின் செயலைப் பற்றியோ ஒன்றைப் பற்றியோ புரிந்துகொள்வதில் தவறு ஏற்படின் அது தவறான புரிந்துணர்வாகும். இந்தத் தவறான புரிந்துணர்வின் காரணமாக முன்னெடுக்கப்படும் செயல்பாடுகளால் நாம் பிறருக்குத் துன்பம் விளைவிக்கிறோம் . ஆக , நன்மை செய்தால் நன்மையும் தீமை செய்தால் தீமையும் விளையும் எனும் உணர்வு எப்போதும் நமக்கு இருக்கவேண்டும் .
நல்லுனர்வுகளால் பண்படாதவன் முரடனாகவும் காட்டுமிராண்டியாகவும் இருக்கிறான். இவனுடைய செயல்பாடுகளால் பிறருக்கு ஏற்படும் துன்பத்தைக்கூட உணரமுடியாதவனாக இருப்பான். உணர்வுகளை உரசிப்பார்க்கும் திறனோ பக்குவமோ இல்லாது இருப்பான். இதனால்தான் சிறு பிள்ளையாக இருக்கும்போதே நல்லுணர்வுகளால் வளர்க்கப்படவும் பழக்கப்படவும் வேண்டும் என்று நமது நீதி நூல்கள் வலியுறுத்துகின்றன .
யூதர்கள் பழமையான அறிவுக்கொவ்வாத சடங்காசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கடவுள் சித்தத்திற்கு புறம்பாக வாழ்ந்துகொண்டிருந்த பொது அதை கண்டித்த ஏசுவின் அன்பையும் இரக்கத்தையும் உணரமுடியாத யூதர்கள் கொடூரமாக துன்பப்படுத்தி அவரைக் கொலை செய்தனர். மத வெறியும் பணவெறியும் ஆடம்பரவெறியும் யூதர்களை உணர்வற்றவகளாக்கியது; அவர்களின் உணர்வுகளை சாகடித்துவிட்டது. ஏசுவின் வாக்கின்படி அவர்கள் ஆவியில் மரித்தவர்களாக இருந்தனர்.
உடலில் உயிர் இருந்தால்மட்டும் போதாது. உணர்வுகளால் வளம்பெற்று இருக்கவேண்டும்; மேம்பாடு அடைந்த்திருக்கவேண்டும். நல்லுணர்வுகளால் மேம்படுத்தப்பட்ட ஓர் உயிரைத்தான் நவீன உலகம் மனிதராக ஏற்றுக்கொள்ளும்; நாகரிகம் மனிதனென்று சொல்லும்.
தாயின், சகோதரர்களின், சமூகத்தவரின் அன்பைப் புரிந்துகொள்ள முடியாதவரை; உணரமுடியாதவரை எப்படி உணர்வுள்ளவர் என்று சொல்லமுடியும்? ஓர் அரசு செய்யும் நல்லச் செயலைக்கூட உணர்ந்து மதிக்கத்தெரியாத மனிதனை எப்படி நல்ல பிரஜையென்று ஒப்புக்கொள்ளமுடியும்?
மனிதனாகப் பிறந்தும் உணர்வற்று இருப்பவர்களை ஆவியிலே ஜீவனில்லாதவர்கள், மரித்தவர்கள் , நடைபிணங்கள் என்று உணரமுடிந்ததினால்தான் தன்னைக் கொடூரமான முறையில் கொலைசெய்தவர்களை , " பிதாவே... இவர்கள் அறியாமல் செய்யும் பாவத்தை மன்னியும்..." என்று யேசுவால் வேண்டிக்கொள்ள முடிந்தது; அவர்களை மன்னிக்கவும் முடிந்தது.
நல்லுணர்வுகளால் தங்களை மேம்படுத்திக்கொண்டு தங்களுடைய மனதையும் செயலையும் காத்துக்கொள்ளும் மனிதர்கள் உயர்ந்த வாழ்க்கைக்கு உரியவர்களாகிறார்கள்.
சாதிய உணர்வு, மத உணர்வு, மொழியுணர்வு, சமூக உணர்வு, இயக்க உணர்வு , நாட்டுணர்வு என்று பல உணர்வுகளின் தாக்கத்திற்கு மனிதர்கள் ஒவ்வொரு நாளும் ஆளாகக்கூடும். இப்படிப்பட்ட சூழலில் எந்த உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பது எனும் ஞானம் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.
சாதிய உணர்வு இந்தியர்களிடையே அதிகமாக இருக்கிறது. இந்த சாதி உணர்வினால் நமக்கு நன்மையா? தீமையா ? என்று பகுத்தாயும் உணர்வு இல்லாத காரணத்தினால்தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் நாடிழந்தோம், நகரிழந்தோம், பேர் இழந்தோம் , புகழ் இழந்தோம்.
உணர்வற்றவர்களின் ஆதாயத்திற்காக வலிவிழக்கவும், மானத்தை இழக்கவும் நேர்ந்தது. இவர்களுக்காக சாதிய உணர்வு வளர்க்கப்பட்டு நம்மினம் கூறுபோடப் பட்டது. " தமிழினம் எப்படிப்போனால் என்ன ... சிதறுண்டு சினாப்பினமானாலென்ன...
எனக்கு என் சாதிதான் முக்கியம்" என்று இருப்பவர்களை என்னவென்பது?
உலகத்தைப் பாருங்கள்... மற்ற இன மக்களைப் பாருங்கள் ... அவர்களின் மேன்மையைப் பாருங்கள்... இறுதியாக நம்முடைய சாதி உணர்வையும் சீர்தூக்கிப் பாருங்கள்...! ஒட்டு மொத்த தமிழினத்திற்கு சாதியுணர்வு சரி பட்டுவருமா? என்று யோசித்துப் பாருங்கள்! சரிபடவில்லைஎன்றால் கைவிடுங்கள்..!
மத உணர்வு எப்படி? அன்பை அடிப்படையாகக் கொள்ளாத எந்த மதத்தையும் ஒதுக்கித் தள்ளுங்கள் ...அன்பின் சாயல் படராத பல ஏற்பாடுகள் மதங்களில் காண்கிறோம். மத உணர்வு மனிதனைப் பிளவுபடுத்த அல்ல என்பதை எப்போதுமே மனதில் இருத்துங்கள்...!
மொழியுணர்வு தேவைதான? மொழி உண்மையிலேயே போற்றப்படல் வேண்டுமா? மொழியுணர்வு இல்லா இனம் அழிந்துவிடுமா? சிந்தித்துப் பாருங்கள்...
உலக மொழி என்றும் தேசமொழி என்றும் தாய்மொழி என்றும் இன்று உலக அரசியல் மனிதர்களை ஆட்டிப்படைக்கிறது. தொடர்பு மொழியாகவும் உலகமொழி யாகவும் ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு ஒவ்வொருவருக்கும் தாய்மொழியைப் படிக்கும் வாய்ப்பை வழங்கினால் என்ன?
ஒருவன் தன்னுடைய தாய்மொழியை விட்டுக்கொடுத்துவிட்டு தேசியத்தில் ஒன்றுபடவேண்டும் என்பது நியாயமா? என் தாய்மொழியில் என்னுடைய கலை, கலாச்சாரம் , பண்பாட்டுக்கூறுகள் என்று எல்லாம் இருக்க நான் என்னுடைய தாய்மொழியை இழக்க சம்மதித்தால் நான் என் முகவரியை இழந்துவிடமாட்டேனா? என் இனம் அழிந்துவிடுமே? எப்படி சம்மதிப்பேன் என்று வீறுகொண்ட உணர்வு பெருக்கெடுக்க நான் உணர்வுள்ளவனாக இருப்பது அவசியம்மல்லவா?
உணர்விலாதவர்கள் எதை இழக்கவும் சம்மதிப்பார்கள். மொழி போனால் என்ன? உரிமை இழந்தால் என்ன ? எதைக்கொடுத்தல் என்ன? கொடுக்காவிட்டால் என்ன? உணர்விழந்து கிடப்பார்கள்...! இப்படிப்பட்டவர்களின் செயலை வருங்கால சந்ததிகள் சபிப்பார்கள் என்பதுமட்டும் நிச்சயம்...!
இரா- ஜெகவீரப்பாண்டியன்.
No comments:
Post a Comment